ஐரோப்பா செய்தி

மொபைல் சேவை பாதிக்கப்படலாம்: பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வானிலை எச்சரிக்கை

பிரித்தானியர்களுக்கு 3 நாட்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.

பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனி தொடர்பில் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுத்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், அந்த எச்சரிக்கைகள் இந்த வாரத்தின் நடுப்பகுதி வரை நீடிக்கும் என தெரிவித்துள்ளது.

இவ் ஆண்டி அதிக குளிர்ச்சியான வெப்பநிலையை நாடு சந்திக்க இருப்பதாக எச்சரித்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.

வட அயர்லாந்து, ஸ்கொட்லாந்தின் சில பகுதிகள், வடகிழக்கு இங்கிலாந்து, தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் என பிரித்தானியாவின் பெரும் பகுதிக்கு மூன்று நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனி காரணமாக பயணத்தில் இடையூறுகள் உருவாகலாம் என்றும், சில கிராமப்பகுதிகள் துண்டிக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ள வானிலை ஆராய்ச்சி மையம், சில இடங்களின் மின்சார சேவையும், மொபைல் சேவையும் துண்டிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

(Visited 41 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!