ஆசியா

மியன்மாரில் இருந்து தாய்லாந்திற்கு தப்பிச் சென்ற பர்மிய மக்கள்!

மியன்மாரில் அந்நாட்டு இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான மோதல் காரணமாக பல்லாயிரக்கணக்கான பர்மிய பொதுமக்கள் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆங் சான் சுங்கின் அரசாங்கம் 2 வருடங்களுக்கு முன்னர் இராணுவப் புரட்சி மூலம் கவிழ்க்கப்பட்ட பின்னர் மியன்மாரில் கொந்தளிப்பான நிலை நீடித்து வருகிறது.

மியன்மாரின் தென்கிழக்கு பிராந்தியத்திலுள்ள கரேன் மாநிலத்தில் சில தினங்களாக இராணுவத்துக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பகுதியில் மோதல்கள் நடந்ததை, இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான கரேன் தேசிய இராணுவத்தின் தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், பெரும் எண்ணிக்கையான மக்கள் எல்லையைக் கடந்து தாய்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

சுமார் 3,998 பேர் தற்காலிக புகலிடம் நாடி தாய்லாந்துக்கு வந்துள்ளனர் என தாய்லாந்தின் தாக் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்லாந்து, ஆயுதப்படைகள், பொலிஸார் மற்றம் சிவில் நிர்வாககத்தினர் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!