ஆசியா

பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் டாரா ஆதம் ஹெல் பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது.

இந்த நிலக்கரி சுரங்கம் தங்களுக்கு தான் சொந்தம் என்று அதே பகுதியில் வசிக்கும் இரு தரப்பு பழங்குடியின மக்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர்.  இதில் இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டும் வந்தது.

இந்நிலையில் நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக பழங்குடியின சமுகத்தினர் இடையே நேற்று இரவில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 16 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த மோதலையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

டாரா ஆதம் கேல் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தின் கோஹாட் மாவட்டத்தில் உள்ளதுஇ இங்கு பெரிய அளவில் நிலக்கரி இருப்பு உள்ளது. இப்பகுதி  2018 இல் கைபர் பாக்துன்க்வாவுடன் இணைக்கப்பட்ட பழங்குடிப் பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!