ஐரோப்பா செய்தி

உக்ரைனில் 8500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா தனது படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து  8500 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வமாக  பிப்ரவரி 2022 இல் இருந்து இதுவரையான காலப்பகுதியில், 8490 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், ஐ.நா தெரிவித்துள்ளது.

பெரும்பாலான இறப்புகள் உக்ரேனிய அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்திலும் ரஷ்யப் படைகளின் தாக்குதலின் கீழும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டொனெஸ்க் மற்றும் லுகான்ஸ் பகுதிகளில் 3927 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமான மற்றும் விகிதாசாரமற்ற தாக்குதல்களை நடத்தியதாக ஐ.நா-ஆணையிடப்பட்ட புலனாய்வு அமைப்பு கடந்த மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)
See also  உத்தரபிரதேசத்தில் டிராக்டர் மற்றும் டிரக் மோதி விபத்து - 10 தொழிலாளர்கள் பலி
Avatar

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content