செய்தி தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டு

மாமல்லபுரம் அருகே  பட்டிபுலம் கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

கடலூர் பகுதியை சேர்ந்த சீனுவாசன் 47  என்பவர்  சென்னையில்  உறவினரின்  சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் தனது குடும்பத்தினருடன் கடலூருக்கு கிழக்கு கடற்கரை வழியாக சென்று கொண்டு இருந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம்  கிழக்கு கடற்கரை.

சாலையில் குறுக்கே  இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க  முயன்ற அரூர் தாலுக்கா வீரப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த  ஏழுமலை வயது 27, அண்ணாதுரை வயது 30 ஆகிய இருவர் மீதும் வேகமாக கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு கால் மற்றும் கைகளில்  எலும்பு முறிவு.

ஏற்பட்டு பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

(Visited 16 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!