இலங்கை செய்தி

அனுரவின் வெற்றி குறித்த பொய் அம்பலமாகியுள்ளது

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமது அமைப்பு எந்தவொரு கருத்துக்கணிப்பையும் மேற்கொள்ளவில்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள்  சக்தி வெற்றிபெறும் என  கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை பிரதிநிதிகள் குழுவின் உத்தியோகபூர்வ x கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி 53% வீதத்துடன்,  ஐக்கிய மக்கள் சக்தி 24% வீதத்துடன் வெற்றி பெறும் என ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றிய-இலங்கை பிரதிநிதிகள் அத்தகைய கணக்கெடுப்பை நடத்தவில்லை என்று கூறுகின்றனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!