செய்தி விளையாட்டு

Womens WC – இங்கிலாந்து அணியிடம் இலங்கை அணி படுதோல்வி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்த வகையில், இலங்கையின் ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 12வது போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

இந்நிலையில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 253 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் நாட் ஸ்கைவர் 117 பந்துகளுக்கு 117 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

இதை அடுத்து, 254 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீராங்கனைகள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில் ஹாசினி பெரேரா 35 ஓட்டங்களும் ஹர்ஷிதா சமரவிக்ரம 33 ஓட்டங்களும் எடுத்தனர்.

இறுதியில், 45.4 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி