இஸ்ரேலின் இனவெறிச் செயல்: அமெரிக்க செனட்டர் கொதிப்பு!
இஸ்ரேலுக்கு வழங்கப்படும் தடையற்ற நிதி உதவிக்கு அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹொல்லன் Senator Chris Van Hollen தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலிய அரசின் புதிய சட்டத்தை அவர் மிக மோசமான இனவெறி செயல் என்று விமர்சித்துள்ளார்.
ஒரே குற்றத்திற்காக யூதர்களுக்கு ஒரு நீதியும், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நீதியும் கடைபிடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய பாரபட்சமான கொள்கைகளைக் கொண்ட ஒரு நாட்டிற்கு அமெரிக்கா பில்லியன் கணக்கிலான இராணுவ உதவியை தொடர்ந்து வழங்குவது முறையற்றது எனவும் Senator Chris Van Hollen கடும் விசனத்தை வெளியிட்டுள்ளார்.




