ஒபாமா சகாப்தக் கொள்கையை இரத்து செய்தார் ட்ரம்ப்!
கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பொது சுகாதாரம் மற்றும் நலனுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன என்ற 15 ஆண்டுகால தீர்ப்பை ட்ரம்ப் நிர்வாகம் இரத்து செய்துள்ளது.
இதன்மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் மத்திய அரசின் திறனை ட்ரம்ப் நிர்வாகம் குறைத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவன நிர்வாகி லீ செல்டினுடன் (Lee Zeldin) இணைந்து தொடர்புடைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த 15 ஆண்டுகால தீர்ப்பானது அமெரிக்க வாகனத் தொழிலை கடுமையாக சேதப்படுத்தியதாகவும், அமெரிக்க நுகர்வோருக்கு விலைகளை பெருமளவில் உயர்த்திய ஒரு பேரழிவு தரும் ஒபாமா சகாப்தக் கொள்கை” என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அத்துடன் தற்போதைய முடிவானது “$1.3 டிரில்லியனுக்கும் அதிகமான ஒழுங்குமுறை செலவை நீக்கும் மற்றும் கார் விலைகளை வியத்தகு முறையில் குறைக்க உதவும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், “இந்த தீர்மானத்திற்கு உண்மையில் எந்த அடிப்படையும் இல்லை, அதற்கு சட்ட அடிப்படையும் இல்லை. மாறாக, தலைமுறைகளாக, புதைபடிவ எரிபொருள்கள் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. பில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்தும் உலகம் முழுவதிலும் இருந்து மீட்டுள்ளன,” என்று கூறியுள்ளார்.





