ஆசியா

சிங்கப்பூரில் மகனுக்கு தந்தை செய்த கொடூரம் – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

சிங்கப்பூரில் மகனின் வாய்க்குள் மிளகாய் நுனியை வலுக்கட்டாயமாகத் திணித்து மகனுக்கு மரணத்தை ஏற்படுத்திய தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர் 37 வயது முகமது அமிர் காதர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் திகதி மதியம் 1.30 மணிக்குடிAnchorvale Road புளோக் 327C இல் உள்ள வீடொன்றில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

அமிரின் மகன் முகமது அரிக் ரஸிக்கின் முகமது அமிர் தரையில் படுத்திருந்தபோது அமிர் தமது வலது கையால் மகனின் வாய்க்குள் மிளகாய் நுனியை வலுக்கட்டாயமாகத் திணித்துள்ளார்.

இதனால் மூச்சுத்திணறி அரிக் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. குற்றப்பத்திரிகையில் அரிக்கின் வயது குறிப்பிடப்படவில்லை.

அமிரின் பெயரை வெளியிடாமல் இருப்பதற்கு நீதிபதியிடம் விண்ணப்பம் செய்யவில்லை என அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தாம் கவனித்துக்கொள்ள இன்னும் பிள்ளைகள் இருப்பதாக அமிர் கூறினார். மற்ற குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அமிர் 20,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

(Visited 9 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content