பிரித்தானியா தப்பிச் செல்ல முற்பட்ட தமிழ் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
![](https://iftamil.com/wp-content/uploads/2023/08/bia-1-jpg.webp)
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பெண்ணுக்கு உதவிய தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை கவுண்டருக்கு வந்து கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்பித்தார்.
இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கவனித்த அதிகாரிகள், தலைமை குடிவரவு அதிகாரியிடம் முறைப்பாடு செய்தனர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்த யுவதியின் தகவல்களை பதிவு செய்து வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.