இலங்கை செய்தி

பிரித்தானியா தப்பிச் செல்ல முற்பட்ட தமிழ் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கைப் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, குறித்த பெண்ணுக்கு உதவிய தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட சந்தேக நபர் அனைத்து அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை கவுண்டருக்கு வந்து கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை சமர்பித்தார்.

இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படம் அவருடையது அல்ல என்பதைக் கவனித்த அதிகாரிகள், தலைமை குடிவரவு அதிகாரியிடம் முறைப்பாடு செய்தனர்.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட தொழில்நுட்ப சோதனையில், மற்றொரு பெண்ணின் கடவுச்சீட்டில் இந்த யுவதியின் தகவல்களை பதிவு செய்து  வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content