இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் பிணையில் விடுவிப்பு!வெளிநாட்டு பயணத்தடை விதிப்பு!

  • January 9, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று (09) முற்படுத்தப்பட்டவேளை 20 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் ஒன்று வெலிவேரியா பகுதியில் பாழடைந்த இடமொன்றில் இருந்து மீட்கப்பட்டது. பாதாள குழு உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமையவே துப்பாக்கி மீட்கப்பட்டிருந்தது. எனவே, குறித்த துப்பாக்கி எவ்வாறு பாதாளகுழு வசம் சென்றது […]

அரசியல் இலங்கை செய்தி

சிறைச்சாலை சென்று டக்ளஸை சந்தித்தார் நாமல்!

  • January 3, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை Douglas Devananda , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa இன்று (03) சந்தித்துள்ளார். மஹர சிறைச்சாலைக்கு சென்றே டக்ளஸை சந்தித்து, நாமல் ராஜபக்ச நலம் விசாரித்துள்ளார் என சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மஹர சிறைச்சாலை வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாமல் ராஜபக்ச, புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டினார். டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் ஒன்று, […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ், பிள்ளையான் சிறையில் வாடுவது வலிக்கிறது: மஹிந்த அணி கவலை!

  • January 2, 2026
  • 0 Comments

” 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டினார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். “இலங்கையில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர்கள் இன்று மறக்கப்பட்டுள்ளனர். உயிரை பணயம் […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸிடம் விசாரணை வேட்டை தீவிரம்! தடுப்பு காவல் உத்தரவு பெற திட்டம்!!

  • December 27, 2025
  • 0 Comments

குற்றப் புலனாய்வு பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அவரை தடுத்து வைத்து விசாரிப்பதற்குரிய தடுப்பு காவல் உத்தரவை பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிங்கள தொலைக்காட்சியொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் மனித படுகொலை விசாரணைப் பிரிவினரால் டக்ளஸ் தேவானந்தா நேற்று (26) கைது செய்யப்பட்டிருந்தார். இராணுவத்தினரால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டப்பூர்வமாக பிஸ்டல் ரக துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதாள குழு […]

இலங்கை செய்தி

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்!

  • December 26, 2025
  • 0 Comments

டக்ளஸ் கைது செய்யப்பட்டதன் பின்னணி என்ன? வெளியாகும் பகீர் தகவல்! முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா Douglas Devananda ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு (Police Media Unit) இன்று மாலை அறிக்கையொன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையின் பிரகாரம், இராணுவத்தினரால் (military) டக்ளஸ் தேவானந்தாவுக்கு “பிஸ்டல் ரக pistol gun துப்பாக்கியொன்று சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டிருந்த […]

error: Content is protected !!