பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மின்டானாவ் தீவுக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவானது.
நிலநடுக்கம் 630 கி.மீ ஆழத்தில் பதிவானதாகவும், நிலத்தில் ஏற்பட்ட சேதம் மிகக்குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
(Visited 40 times, 1 visits today)