ஜப்பானில் வினோதம் – 1000க்கும் அதிகமான வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து மகிழ்ந்த நபர்
ஜப்பானில் மக்களின் வீட்டிற்குள் நுழைந்து மகிழ்ச்சியடையும் நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்த சந்தேகத்தின்பேரில் 37 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கியூஷு தீவின் Dazaifu நகரைச் சேர்ந்த அவர் அவ்வாறு 1,000க்கும் அதிகமான வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்ததாக நம்பப்படுகிறது.
அதை அவரே Mainichi Shimbun ஊடகத்திடம் கூறியிருந்தார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.
வீடுகளுக்குள் அனுமதியின்றி நுழைவதை பொழுதுபோக்காகச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஓர் தனி ஆனந்தம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னைக் கண்டுபிடிப்பார்களா, மாட்டார்களா என்று எண்ணும்போது தனி ஆனந்தம் கிடைக்கும்…மனவுளைச்சலைக் குறைக்க உதவும்,” என்றார் அவர்.
(Visited 10 times, 1 visits today)





