ஐரோப்பா செய்தி

டென்மார்கில் கத்திக்குத்து – 25 வயதான இளைஞன் பலி

டென்மார்கில்  இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 25 வயதுடைய நபர் ஒருவர்  கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க் கிழக்கு Jylland பாகுதியில் Grøfthøjparken -Viby என்ற முகவரியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

Viby நகரில் உள்ள Grøfthøjparken முகவரியில் புதன்கிழமை 18:44 மணிக்கு ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரைக் கண்டனர். சிறிது நேரத்தில் அந்த நபர் இறந்தார்.

32 வயது மற்றும் 33 வயதுடைய இருவரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர், ஆனால் வியாழன் இரவு மூன்றாவது குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

25 வயதுடைய மூன்றாவது குற்றவாளி, வியாழன் மதியம் 1 மணிக்கு குறுக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் .

இந்த வழக்கில் 32 வயது மற்றும் 33 வயது நபர்களின் பங்கு குறித்து தெளிவுபடுத்தும் பணியில் கிழக்கு Jylland பொலிசார் இன்னும் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 26 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!