திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தான்தோன்றி ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்ததாகும்.
இவ்வாலயத்தின் வருடாந்த கும்பாபிஷேகம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதாவது 27 அடி உயரமான நாகம்மன் சிலை இலங்கையின் திருகோணமலையில் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக பிரதம குரு தெரிவித்தார்.
ஐந்து தலை நாகம் படமெடுப்பதும், அம்மன் நாகத்தின் மேல் அமர்ந்து காட்சி தருவதும் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், கண்கொள்ளா காட்சியாகவும் உள்ளது.