இலங்கை

இலங்கை: சுப்பர் டீசல் விலை அதிகரிப்பு!

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின் மாதாந்திர விலை திருத்தத்தின் படி இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, லங்கா சுப்பர் டீசலின் விலை 18 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 331 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏனைய எரிபொருள்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

அதன்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 183 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டென் 92 ரக பெற்றோல் லீற்றரொன்றின் விலை 309 ரூபாயாகவும், ஒக்டென் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 371 ரூபாயாகவும் தொடர்ந்தும் பேணப்படும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையை 286 ரூபாயாக, தொடர்ந்தும் மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

 

(Visited 21 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content