இலங்கை – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து!

இலங்கை – தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (01) பயணிகள் போக்குவரத்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காலியில் இருந்து கடுவெல நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை வெளியேறும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது, வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இது நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், தீ பரவுவதற்கு முன்பு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்திலிருந்து அனைத்து பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், அதில் 41 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)