ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஆயுத விநியோகம் செய்த தென்னாபிரிக்கா : விசாரணைகள் ஆரம்பம்!

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பியதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவுள்ளதாக தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு கேப்டவுன் அருகே உள்ள கடற்படை தளத்தில் இருந்து ரஷ்ய கப்பல் ஒன்று ரஷ்யாவுக்கான ஆயுதங்களை கொண்டு சென்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இதனை தென்னாப்பிரிக்கா மறுத்த நிலையில் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்க அந்நாட்டின் அதிபர் குழுவொன்றை நியமித்தார்.

இந்தக் கூற்றுக்கள் இந்த மாத தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர ரீதியில் விரிசலை  உண்டாக்கியது.

தென்னாப்பிரிக்க அரசாங்கம் உக்ரைனில் நடக்கும் போரில் நடுநிலை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக பலமுறை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“குற்றச்சாட்டுகளின் தீவிரம்,  தென்னாப்பிரிக்காவின் சர்வதேச உறவுகளில் இந்த விஷயத்தின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக விசாரணையை நிறுவ ஜனாதிபதி முடிவு செய்தார்” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விசாரணை முடிந்து இரண்டு வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை ஜனாதிபதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்