ரஷ்யா – பின்லாந்து உறவுகள் மோசமடையும் அபாயம்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/11/inbound4000340440408765671-jpg.webp)
ரஷ்ய எல்லையில் உள்ள 04 நுழைவுச் சாலைகளை மூட பின்லாந்து அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அகதிகளின் குடியேற்றம் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு பின்லாந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யா அகதிகளை எல்லைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக பின்லாந்து குற்றம் சாட்டியுள்ளது.
அத்துடன், இந்த வாரத்தில் மட்டும் பின்லாந்திற்குள் நுழைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் 300 என குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், எல்லை நுழைவாயிலை மூடும் பின்லாந்தின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை சீர்குலைக்கும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
(Visited 6 times, 1 visits today)