இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் அகதிகள் – கடுமையாகும் கட்டுப்பாடுகள்

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணிக்கும் அகதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சில சிறப்பு நடவடிக்களை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

அகதிகள் பிரான்ஸின் பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக சிறு படகுகளிலும், சிலர் வாகனங்களில் மறைந்து ஒளிந்தும் பயணிக்கின்றனர்.

இந்த ஆபத்தான் பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

அகதிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து உள்துறை அமைச்சர் Bruno Retailleau, சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.

தரை மற்றும் வான் வழி கண்காணிப்புகளுக்காக ட்ரோன் கருவிகளுடன் 60 சிறப்பு நிபுணர்களும், Dunkerque மாவட்டத்துக்கு 15 பொலிஸாரும், Calais மாவட்டத்துக்கு 10 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபடுவர்களை கண்காணிப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!