ஆசியா

ஜப்பான் பொதுத்தேர்தலில் சாதனை படைக்கும் பெண்கள்

அக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள ஜப்பான் பொதுத் தேர்தலில் சாதனை அளவாக 314 பெண்கள் போட்டியிடுகின்றனர்.

எனினும் 465 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிடும் 1,344 மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை கால் வாசிக்கும் குறைவு என்று உள்ளூர் ஊடகங்கள் அக்டோபர் 16 அன்று தெரிவித்தன.

நீண்ட காலமாக ஆட்சியிலிருக்கும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மையை தக்க வைத்துக்கொள்வதற்காக பிரதமர் ஷிகெரு இஷிபா தனது கையை உயர்த்த முயல்கிறார்.

அக்டோபர் 15 அன்று பிரசாரங்களைத் தொடங்கிய 1,344 வேட்பாளர்களில், முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாக 23 விழுக்காட்டினர் பெண்கள் என்று யோமியூரி, ஆசாஹி நாளிதழ்கள் உள்ளிட்ட ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

ஸ்லஷ் நிதி ஊழலில் சிக்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக பெண்களைத் தேர்தலில் நிற்க திரு இஷிபா மேற்கொண்டது இந்த அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன் 2009ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அதிகளவில் 229 பெண்கள் போட்டியிட்டனர்.

(Visited 35 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!