இலங்கை

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் சகோதரர்! பொலிஸார் தீவிர விசாரணை

எழுவன்குளம பிரதேசத்தில் 16 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவரை தேடி வனாத்தவில்லுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

53 மற்றும் 14 வயதுடைய சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருவரும் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.

சிறுமியின் தாயார் மிகவும் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளதாகவும், பின்னர் அவர் தனது தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனால், குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லுவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content