உலகம் செய்தி

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மரியா மச்சாடோவுக்கு முதுகெலும்பு முறிவு

வெனிசுலா(Venezuela) எதிர்க்கட்சித் தலைவரும், இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ(Maria Corina Machado), கடந்த வாரம் வெனிசுலாவில் இருந்து நார்வேக்கு(Norway) ரகசியமாகப் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி ​​முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு நிகழ்வில் பங்கேற்க ஒரு சிறிய மீன்பிடி படகில் அதிக ஆபத்துள்ள கடலை கடக்கும் போது காயம் ஏற்பட்டதாக நோர்வே நாளிதழான ஆப்டன்போஸ்டன்(Aftenposten) தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து, உல்லெவலில்(Ullevaal) உள்ள ஒஸ்லோ(Oslo) பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவர்கள் மச்சாடோவை பரிசோதித்ததாக ஆப்டன்போஸ்டன் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒஸ்லோவில் நோபல் பரிசைப் பெறுவதற்காக ஆபத்தான பயணத்தின் போது தனது உயிருக்கு பயந்ததாக மச்சாடோ முன்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த வாரம் மரியா கொரினா மச்சாடோவிற்கு பரிந்துரைக்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அவரது மகள் பெற்றுக்கொண்டார்.

ஆகவே, காயம் காரணமாகவே இந்த நிகழ்வில் மரியா கொரினா மச்சாடோ பங்கேற்கவில்லை என்று நம்பப்படுகிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!