ஐரோப்பா

பிரித்தானியாவின் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் மரணம்

பிரித்தானியாவின் பிராட்போர்டில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

29 வயதான Bryony Gavit மற்றும் அவரது 09 வயது மகள் Denise Burtle, 05 வயது மகன் Oscar Burtle மற்றும் இளைய மகள் Aubree Burtle ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேற்கு யார்க்ஷயர் பொலிஸாரின் துப்பறியும் பிரிவுகள், தீ வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 1.45 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு பொலிஸாரின் அவசர பிரிவுக்கு தகவல் வழங்கியதாகவும் வீட்டிற்கு அருகில் இருந்த அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மூன்று குழந்தைகளில் இளையவரான ஆப்ரே, தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு இந்த சோகமான சம்பவத்தை சந்தித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், நண்பர்கள் மலர்களை வைத்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

 

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content