சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை
சிங்கப்பூரில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் உடல், மன நலனுக்கு ஆதரவளிக்கும் புதிய அரசாங்க இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கைப் பராமரிப்புச் சேவைகளையும் மனநல ஆதரவையும் மெருகூட்ட இயக்கம் முனையும்.
இதன் மூலம் 20,000 ஊழியர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலத்தையும் மனநலத்தையும் எவ்வாறு பேணுவது என்ற தகவல்களை வழங்க அடுத்த 2 ஆண்டுகளில் 20 சாலைக் காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகள், பொழுதுபோக்கு நிலையங்கள் ஆகியவற்றில் அவற்றை எதிர்பார்க்கலாம்.
2021ஆம் ஆண்டிலிருந்து சுமார் 2000 ஊழியர்கள் மனநல ஆதரவு வழங்குவதில் பயிற்சி பெற்றுள்ளனர். சக ஊழியர்களுக்கு அவர்கள் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)





