செய்தி விளையாட்டு

RBC அணியிலிருந்து வெளியேறும் மேக்ஸ்வெல்!

அவுஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆர்சிபி-யை Unfollow செய்ததால் அவர் அணியை விட்டு வெளியேறலாம் என்று தகவல்கள் வெளியாகிவுள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய அவர் கடுமையாக சொதப்பினார்.

இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சில போட்டிகளில் இருந்து அவரே வெளியேறுவதாக தெரிவித்திருந்தார்.

அவுஸ்திரேலிய அணிக்காக ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரராக இருக்கும் மேக்ஸ்வெல், ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துகிறார் என விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், ஆர்சிபி அணி ஐபிஎல் 2024 சீசனில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து மேக்ஸ்வெல் அணியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆர்சிபி அணியை Unfollow செய்துள்ளார்.

இதன்மூலம் மேக்ஸ்வெல் ஐபிஎல் 2025இல் புதிய உரிமைக்காக விளையாட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இது ஆர்சிபி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்த சீசனில் ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே தக்கவைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!