இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

2 வாரங்களை சிறப்பாக பயன்படுத்திய அனுரகுமார – எரிக்சொல்ஹெய்ம் பாராட்டு

இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன , இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்

சமூக ஊடகத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

“இலங்கைக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்கவேண்டும். இலங்கையின் ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்களாகின்றன , இந்த காலத்தை அவர் அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார்.

அவர் இராஜதந்திர செயற்பாடுகளை மிகச்சரியான முறையில் முன்னெடுத்துள்ளார்.முதலில் இந்திய தூதுவருடன் சந்திப்பு, பின்னர் சீன தூதுவருடன், இதன் முக்கியமான நாடு என பார்த்தால் இந்தியாவிற்கே முதலிடம் அதற்கு பின்னரே சீனா என்ற சமிக்ஞையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அனைத்து நாடுகளினதும் தூதுவர்களை அவர் சந்தித்துள்ளார்.மேற்குலகம் , ரஸ்யா மேலும் பல நாடுகள். இலங்கைக்கு முதலிடம் என்ற வெளிவிவகார கொள்கையே பின்பற்றப்படும் என்ற சமிக்ஞையை அவர் வெளியிட்டுள்ளார். பதவியேற்றதும் அனுரகுமாரதிசநாயக்க உடனடியாக கண்டியில் தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அவர் அங்கு மகாநாயக்க தேரர்களின் ஆதரவை பெற்றார்.

See also  இலங்கையில் ரணில் ஆரம்பித்தவற்றையே அனுர செய்கிறார் - முன்னாள் அமைச்சர் தகவல்

அதன் பின்னர் அவர் தமிழ் முஸ்லீம் அரசியல் மததலைவர்களை சந்தித்துள்ளார். அனைத்து இனசமூகத்திற்குமான இலங்கையை உருவாக்குவதற்கான அவரது வலியுறுத்தல்கள் வலுவானவையாக காணப்படுகின்றன.

அவர் வர்த்தக சமூகத்தினை நோக்கி தனது கரங்களை நீட்டியுள்ளார்,வர்த்தக சமூகத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றுவதன் மூலமே வளமான இலங்;கையை கட்டியெழுப்ப முடியும்,கல்வி சுகாதாரம் மற்றும் வறியவர்களிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வளங்களை கொண்டுவரமுடியும் என்பதை அவர் கோடிட்டுக்காட்டியுள்ளார்.

அவர் ஊழல் அற்ற குழுவினரை அரச அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளார்.அமைச்சர்களிற்கு ஆடம்பர கார்களிற்கான சலுகைகளை நிறுத்தியுள்ளார்.அரச தலைவர்களிற்கு ஆடம்பரமற்ற வாழ்க்கை என்பதை அவர் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் இலங்கையின் பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதில்லை. இடதுசாரி தலைவர் குறித்து இராஜதந்திரிகள் மத்தியி;ல் காணப்படும் சந்தேகத்தை இது போக்காது.

ஆனால் இது நிச்சயமாக சிறந்த ஆரம்பம். அமைதியான,பலமத, பசுமையான செழிப்பு மிக்க இலங்கையை கட்டியெழுப்ப அனைவரும் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு உதவவேண்டும்” என நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 8 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content