குஜராத் முதல்வருடன் ஜே.வி.பி. செயலர் சந்திப்பு: கேரளா செல்லவும் ஏற்பாடு!
ஜே.வி.பியின் JVP பொதுச்செயலாளர் டில்வின் சில்வா Tilvin Silva, இந்தியா குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர ரஜினிகாந்த் படேலுடன் Bhupendra Rajnikant Patel பேச்சு நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பு நேற்று நடைபெற்றது என ஜே.வி.பியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் (ICCR) அழைப்பின் பிரகாரமே டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ளார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ் Kitnan Selvaraj , இளங்குரமன் Ilanguraman உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர்.
இவ்விஜயத்தின் ஓர் அங்கமாகவே குஜராத் மாநில முதல்வருடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது குஜராத் மாநிலத்தின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் இலங்கையின் கைத்தொழில், சுற்றுலா மற்றும் ஆடை உற்பத்தித் துறைகளின் மேம்பாட்டிற்காக இணைந்து செயற்படுவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜே.வி.பி. குழுவினர் இவ்விஜயத்தின்போது கேரளாவுக்கும் செல்லவுள்ளனர். அங்கு மாநில முதல்வருடன் பேச்சு நடத்தவுள்ளனர். கேரளாவில் இடதுசாரி ஆட்சி நிலவுகின்றது.





