மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும்: ஈரான் சபதம்!
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க சொத்துகள் அழிக்கப்படும் என்று ஈரான் இராணுவம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தினால், அதற்குப் பதிலடியாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தொடர்புள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார மையங்களை இலக்கு வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்டுள்ள நாடுகள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க அமெரிக்கப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்று ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் முக்கியப் பாலத்தை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




