இலங்கை செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காப்புறுதி செய்வதில் நடக்கும் மோசடி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத காப்புறுதி மற்றும் ஆட்கடத்தல்கள் இலங்கையில் சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

குவைத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் இந்தக் கடத்தலில் சிக்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இந்நிலைமையை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டிற்கும் தொழிலாளியாக வெளிநாடு செல்லும் போது அந்த காப்புறுதியின் மூலம் காப்புறுதித் தொகையை பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகின்றார்.

காப்புறுதி அமைப்பில் 3731 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

(Visited 15 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை