தாலிபான் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ள ICC

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஜூலை 8, 2025 அன்று ஆப்கானிஸ்தானில் உள்ள இரண்டு மூத்த தலிபான் தலைவர்களுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது, இது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹைபதுல்லா அகுன்சாதா – தலிபானின் உச்ச தலைவர், அப்துல் ஹகீம் ஹக்கானி – தலிபானின் தலைமை நீதிபதி ஆகியோருக்கு எதிராக வாரண்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 15, 2021 முதல் ஆப்கானிஸ்தானில் நடைமுறை அதிகாரத்தை செலுத்தி வருகின்றனர்.
ICC சட்டப்பிரிவின் கீழ் மனிதகுலத்திற்கு எதிரான துன்புறுத்தல் குற்றங்களுக்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
* பாலின அடிப்படையிலான துன்புறுத்தல்
* பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் :- கல்வி உரிமை மறுப்பு, தனியுரிமை மீறல், குடும்ப வாழ்க்கை தடை, இயக்க சுதந்திரம் கட்டுப்பாடு,கருத்து சொல்ல தடை,மத சுதந்திரம் மறுப்பு
*அரசியல் துன்புறுத்தல்
“பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கூட்டாளிகள்” என கருதப்படுபவர்களை அரசியல் எதிரிகளாக இலக்கு வைத்தல்
இது வரலாற்றில் முதல் முறையாக ஒரு சர்வதேச நீதிமன்றம் LGBTQ நபர்களை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களாக அங்கீகரித்துள்ளது. இது பாலின துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பான முதல் ICC வாரண்ட்களாகவும் அமைந்துள்ளது.
ICC வழக்குரைஞரின் விண்ணப்பங்கள் பின்வரும் வலுவான ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை.அவை நிபுணர் மற்றும் சாட்சி சாட்சியங்கள் ,அதிகாரப்பூர்வ ஆணைகள் மற்றும் கட்டளைகள்,தடயவியல் அறிக்கைகள்,சந்தேக நபர்கள் மற்றும் தலிபான் பிரதிநிதிகளின் அறிக்கைகள்,ஆடியோ-விஷுவல் பொருட்கள் என்பனவாகும்
விசாரணை பல்துறை நிபுணர் குழுவால் நடத்தப்பட்டது.பாலின நிபுணர்கள்,நாட்டு நிலைமை நிபுணர்கள்,உளவியல்-சமூக நிபுணர்கள் ஆசியோர் ஆவர்
தலிபான் இந்த வாரண்ட்களை “இஸ்லாத்திற்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கை” என்று கண்டித்துள்ளது. தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் கூறுகையில்:”நாங்கள் எந்த நீதிமன்றத்தின் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை, அதன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாகவும் எங்களைக் கருதவில்லை”
இந்த ICC கைது வாரண்ட்கள் ஆப்கானிஸ்தானில் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் LGBTQ சமூகத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச நீதிமன்றத்தின் பதிலடியாக அமைந்துள்ளது. இது சர்வதேச நீதியில் ஒரு முக்கிய மைல்கல் . மனித உரிமைகள் பாதுகாப்பில் ஒரு வரலாற்று முன்னேற்றமாக கருதப்படுகிறது.