இலங்கை

இலங்கையில் சிறுவனின் உயிரை பறித்த புத்தாண்டு நிகழ்வு

  • April 23, 2023
  • 0 Comments

அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்றிருந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 10 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 15 வயதான தமது சகோதரருடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருந்த குறித்த சிறுவன் ஓடிக் கொண்டிருந்த நிலையில் கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் கலாவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்தார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் ஜெர்மன் மொழி தெரியாமல் வாழும் மக்கள்!

  • April 23, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மன் மொழி தெரியாதவர்களாக இருக்கின்றார்கள் என்ற புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் வாழுகின்ற மக்களில் 15 வீதமானவர்கள் ஜெர்மனி மொழியை பேசவோ அல்லது போதுமான அளவு அறிவை கொண்டவர்களாக இல்லை என்று தெரியவந்திருக்கின்றது. இவ்வாறு ஜெர்மனிய மொழி தெரியாதவர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல சிக்கலை எதிர் நோக்குகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லண்டன் சோஸ்அல்கரிக் நீடண்சக்சர்ஸ் ஹம்பேர்க் இல் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்  ஜெர்மனி […]

இலங்கை

தேர்தலுக்கு தயார் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ

  • April 23, 2023
  • 0 Comments

எந்த நேரத்திலும், எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்சி என்ற ரீதியில் அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் நேற்று (22) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கட்சி தீர்மானத்துக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்,ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.தற்போதைய […]

இலங்கை செய்தி

முதியோர்களின் தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை – அரச ஊடக நிறுவனம் ஒன்றின் அறிவிப்பாளர் ராஜினாமா

  • April 22, 2023
  • 0 Comments

இலங்கையிலுள்ள அரசாங்க ஊடக நிறுவனமொன்றில் தொகுப்பாளராகப் பணியாற்றிய இஷாரா தேவேந்திரா, தனது சுயமரியாதைக்காக தனக்குப் பிடித்த வேலையைத் துறக்க முடிவு செய்ததாகக் கூறுகிறார். மேலும் பலம் வாய்ந்ததாகக் காட்டிக் கொள்ளும் நிறுவனத்தில் உள்ள முன்னாள் மூத்தவர்களின் மன உளைச்சலைத் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்துக்களை அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவிட்டுள்ளார். எனக்கு பிடித்த வேலையை விட்டுவிட்டேன்… சுயமரியாதைக்காக.. இந்தக் கதையை 15.03.2023 அன்று சொல்ல விரும்பினேன். […]

இலங்கை செய்தி

குழந்தை கண்முன்னே நீர்வீழ்ச்சியில் குதித்த தாய்

  • April 22, 2023
  • 0 Comments

குடும்ப தகராறு காரணமாக திம்புள்ள பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்ய வந்த நான்கு பிள்ளைகளின் தாயார் (22) பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயுள்ளதாக திம்புல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவத்த பிரதேசத்தில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான லெச்சுமன் நிஷாந்தனி (வயது 34) என்பவர் டொவன் நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து காணாமல் போயுள்ளார். குடும்பத் தகராறு தொடர்பில் இரண்டு பிள்ளைகளுடன் திம்புல பத்தனை […]

இலங்கை செய்தி

இலங்கையில் பெற்ற தாயை தேடும் பிரான்ஸ் பெண்

  • April 22, 2023
  • 0 Comments

தனுஷிகா ஜெயந்தி 1992 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி அவிசாவளை வைத்தியசாலையில் பிறந்து தற்போது பிரான்சில் வசிக்கின்றார். இளம் பிரான்ஸ் நாட்டு ஜோடியினால் தத்தெடுப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், தற்போது 31 வயதை எட்டியுள்ளதால், இலங்கையில் தனது தாயைக் கண்டுபிடிக்க முயற்சித்தும் தோல்வியடைந்தார். அப்போது பிரான்ஸ் பெற்றோர்கள் எடுத்துச் சென்ற மட்டுப்படுத்தப்பட்ட தகவலின்படி, தனுஷிகாவின் தாயார் அதிகாரி அப்புஹாமில்லாவின் சந்திர குலபாலிகா என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த முகவரி தெஹரகொட, கந்தலந்த என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணம் வந்தார் நடிகர் திலகத்தின் மகன்

  • April 22, 2023
  • 0 Comments

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான ஆய்வு நூல் வெளியீடும்,  பட்டிமன்றமும் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காகவே சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் யாழ்பாணம் வந்துள்ளார். சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான நூலினை முனைவர் மருதமோகன் மேற்கொண்டு குறித்த நூலினை இன்றைய தினம் யாழ்ப்பாண […]

ஆப்பிரிக்கா செய்தி

சூடானில் இருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள்

  • April 22, 2023
  • 0 Comments

மோதலில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் சூடானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற உதவுவதாக சூடான் ராணுவம் (SAF) தெரிவித்துள்ளது. அமெரிக்க, பிரித்தானிய, சீன மற்றும் பிரான்ஸ் தூதர்கள் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேறும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூடானில் இருந்து வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று சூடான் ராணுவ தளபதி அப்தெல் பத்தா சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளார். சூடான் ராணுவ ஆட்சியில் உள்ளது. தற்போது, ​​சூடான் இராணுவத்திற்கும், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு சூடான் இராணுவத்திற்கு ஆதரவான கூடுதல் இராணுவப் பட்டாலியனுக்கும் […]

இலங்கை செய்தி

மனைவியை கடத்திச் சென்ற கணவன் பொலிஸில் சரண்

  • April 22, 2023
  • 0 Comments

சிலாபம் , முனுவங்கம பிரதேசத்தில் மனைவியைக் கடத்திச் சென்ற கணவர் இன்று (22) சிலாபம் பொலிஸில் சரணடைந்துள்ளார். கடந்த 19ஆம் திகதி கடத்திச் சென்ற தனது 18 வயது திருமணமான இளம் மனைவியுடன் அவர் இவ்வாறு சரணடைந்துள்ளார். இதன்படி, குறித்த பெண்ணின் கணவர் எனக் கூறப்படும் தம்புள்ளையைச் சேர்ந்த 21 வயதுடைய சந்தேகநபர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் இருந்து தமது மகள் கடத்தப்பட்டதாக குறித்த பெண்ணின் பெற்றோர் சிலாபம் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிலாபம் […]

இலங்கை செய்தி

கொலைச் சந்தேக நபர்களை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிசார்

  • April 22, 2023
  • 0 Comments

மிதிகம பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை தேடும் நடவடிக்கையில் இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். இதன்படி, கடந்த மார்ச் மாதம் மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளரைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூவரைத் தேடுவதற்கு உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்ச் 29 அன்று வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்களால் உணவக உரிமையாளர் ஒருவர் அவரது உணவகத்திற்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் […]

error: Content is protected !!