இலங்கையில் சிறுவனின் உயிரை பறித்த புத்தாண்டு நிகழ்வு
அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்றிருந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். 10 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். 15 வயதான தமது சகோதரருடன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றிருந்த குறித்த சிறுவன் ஓடிக் கொண்டிருந்த நிலையில் கீழே வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் அவர் கலாவெவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்தார். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக […]













