இரத்தினபுரியில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் மாணவி
இரத்தினபுரியில் பாடசாலை மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட பலாவெல பொலிஸ் நிலைய பிரிவுக்குட்பட்ட ரம்புக்கந்த தோட்டத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் தமிழ்மொழிமூலப் பிரிவில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் கணேசன் ருச்ஷானி (வயது 15) என்ற மாணவியே, இம்முறை எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கடந்த வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் தனது வீட்டில் போதிய […]













