கருத்து & பகுப்பாய்வு

ஜெர்மனியில் வேலை தேடுவது எப்படி?

  • April 24, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் வேலை தேட, நீங்கள் தொடங்கலாம் Steptone.de மற்றும் arbeitsagentur.de. ஜெர்மனியில் வேலை தேட விரும்பும் அனைவரும் முதலில் ஜெர்மனியில் வேலை தேட வேண்டும். நீங்கள் ஜெர்மனியில் ஆட்சேர்ப்பு நிறுவனங்களைத் தேடலாம். ஜெர்மனியில் பேஸ்புக் குழுக்களில் நீங்கள் வேலை தேடலாம். நீங்கள் ஒரு வேலையைக் கண்டுபிடித்தவுடன், உங்களுக்கு பணி அனுமதி தேவைப்படலாம். வெளிநாட்டிலோ அல்லது ஜெர்மனியிலோ இதைச் செய்யலாம். ஜெர்மன் குடிமக்கள், மற்றும் குடியிருப்பாளர்கள், வேலை தேடுவதற்கு பணி அனுமதி தேவையில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மற்ற ஒவ்வொரு […]

இந்தியா

தெரு நாய்கள் தாக்கியதால் பலியான 7 வயது சிறுவன் ; அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!

  • April 24, 2023
  • 0 Comments

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுவன் தெருநாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டம், பிலாரியில் தந்தை மற்றும் தாய்க்கு தேநீர் வாங்கிக்கொண்டு வருவதற்காக சவேந்திர குமார் என்ற 7 வயது சிறுவன் தன்னுடைய அக்காவுடன் கடைக்குச் சென்றான். அப்போது, தெருவில் நின்றுக்கொண்டிருந்த தெருநாய்கள் கூட்டத்தில் சவேந்திர குமார் சிக்கிக்கொண்டான். இதைப் பார்த்த சகோதரி தம்பியை நாய்களிடமிருந்து மீட்க போராடினாள். ஆனால், சிறுவனால் தெருநாய்கள் தாக்குதலிலிருந்து மீள முடியாமல் போனது. […]

இலங்கை

கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பம்!

  • April 24, 2023
  • 0 Comments

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று முதல் சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளன. இன்று முதல் வழமை போன்று கண் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைகள் இடம்பெறும் என சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. பல நோயாளிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, கண் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ப்ரெட்னிசோலோன் எனப்படும் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்தியதால் நோயாளிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் […]

பொழுதுபோக்கு

அயலான் திரைப்படத்தின் அட்டகாசமான அப்டேட்!

  • April 24, 2023
  • 0 Comments

இயக்குநர் ரவிகுமார்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்ளிடையே கேள்வி எழுந்தது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயலான் […]

ஐரோப்பா

போர்த்துகளில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாழ்வாரம்; வெளியான புகைப்படங்கள்

  • April 24, 2023
  • 0 Comments

போர்த்துகளில் 2000 ஆண்டுகள் பழமையான சாலைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் ஆசையை தூண்டியுள்ளது. தொன்மையான கலை வேலைப்பாடுகளை கொண்ட இந்த புராதான கலைப்படைப்பானது பார்ப்போர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தளமானது ரோமன் கேலரி என்று அழைக்கப்படுகின்றது. மற்றும் இது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தற்போது சுற்றுலா தளமாக மாற்றப்பட்டுள்ளதால் வருடத்திற்கு 2 முறைகள் திறக்கப்படுகின்றது. இது லில்ஸ்பன் நகரத்தின் அடியில் செல்லும் நீர்நிலைகளுக்குள் அமைந்து […]

வட அமெரிக்கா

கனேடிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியாகியுள்ள ஒரு முக்கிய அறிவித்தல்

  • April 24, 2023
  • 0 Comments

கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல்விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரினா கோல்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். புதிய கடவுச்சீட்டு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக அல்லது பழைய கடைவீச்சீட்டை புதுப்பித்து கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு பொருத்தமான நேரம் இதுவல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாட்டில் பொதுத்துறை ஊழியர்கள் பாரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு பின்னணியில் அமைச்சர் பொதுமக்களிடம் கடவுச்சீட்டுக்களுக்கு தற்போதைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டாம் […]

இலங்கை

குவைத்தில் தொழில்புரிந்த 52 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

  • April 24, 2023
  • 0 Comments

குவைத்தில் நீண்ட காலமாக தொழில் புரிந்த 52  இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்த பின்னர்  குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளின்  தற்காலிக விமான அனுமதியின் கீழ் இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இந்த வகையில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐந்தாவது குழு இதுவாகும். இவர்கள்  இன்று  காலை 06.05 மணியளவில் குவைத்திலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL -230 […]

இலங்கை

அநுராதபுரத்தில் உயிரிழந்த தாய்க்கு மகன் செய்த மோசமான செயல்!

  • April 24, 2023
  • 0 Comments

தாயின் சடலத்தை வீட்டின் வீதி வழியாக கொண்டு செல்ல அனுமதி வழங்காத மகன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.இச் சம்பவம் அனுராதபுரத்தில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஹொரவபொத்தான பிரதேசத்தில் 83 வயதான தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மகளின் வீட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கமைய அனைவரும் தயாரான போதிலும் உயிரிழந்த தாயின் மகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் மகனின் வீட்டை கடந்தே செல்ல வேண்டும். இந்த நிலையில் தனது வீட்டை கடந்து […]

இலங்கை

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவர் படுகொலை – கொலைக்கு பயன்படுத்திய ஆயுதம் மீட்பு

  • April 24, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கண்டுபிடிக்கபபட்டுள்ளது. கிணற்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை 2 நாட்கள்  தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து […]

வட அமெரிக்கா

அமெரிக்க விமானத்தில் பரபரப்பு – நடுவானில் தீப்பிடித்த எஞ்ஜின்

  • April 24, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பறவை மோதியதால் தீப்பிடித்தது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் கொலம்பஸில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதியதால், என்ஜின் பகுதியில் தீ பற்றியது. விமானம் உடனடியாக கொலம்பஸ் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாகவும், அங்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்ததாகவும் கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. […]

error: Content is protected !!