இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் எலிகாய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி காலி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வருடத்தில் மாத்திரம் 229 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 19 மரணங்களும் பதிவாகியுள்ளன. எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவது நெற்பயிர்களில் வேலை செய்பவர்கள் மாத்திரமல்ல என காலி மாவட்ட சமூக விசேட வைத்திய நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

பஞ்சாப்பில் வாயு கசிவால் 11 பேர் உயிரிழப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வாயு கசிவு  ஏற்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கியாஸ்புரா பகுதியில் வாயு கசிவு ஏற்பட்டதில் 9 பேர் பலியாகி உள்ளதுடன், 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மயக்கம் அடைந்த நபர்களின் குடும்பத்தினர் ஊடகங்களில் பேட்டி அளித்துள்ளனர். அதில் என் குடும்பத்தில் மட்டும் 5 பேருக்கு சுயநினைவு இல்லை. எல்லோரும் கூட்டம் கூட்டமாக மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினோம். எங்கள் ஊர் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டனர். […]

ஐரோப்பா

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவிக்கு எதிராக 17வது வாரமாக தொடரும் போராட்டம்

  • April 30, 2023
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் வரலாறு காணாத மாபெரும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரமளிக்கும் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவானது பல கட்ட மக்கள் போராட்டங்களால் வெற்றிகரமாக இடைநிறுத்தப்பட்டது. ஆனால் அதை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி நெதன்யாகுவுக்கு எதிராக 10 ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேலியர்கள் தலைநகர் டெல் அவிவில் திரண்டுள்ளனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் குறைகும் வகையில் அரசு கொண்டு வரும் சட்டம் […]

ஆசியா

செவ்வாய் கிரகத்தில் நீர்.. சீன ஜூராங் விண்கலம் ஆய்வில் புதிய சாதனை.!

  • April 30, 2023
  • 0 Comments

செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான சமீபத்திய ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது. செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன. இதன் மூலம் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஜுராங் ரோவர் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும், உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் […]

செய்தி தமிழ்நாடு

கன்னியாகுமரியின் இரும்பு மனிதன் ஸ்பெயினின் அர்னால்டு கிளாசிக் இரும்பு மனிதனாக மாற பயிற்சி

  • April 30, 2023
  • 0 Comments

கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15,தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் அருகேயுள்ள சங்கு துறை பீச்சில் 5 டன் மினி […]

இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று – இருவர் உயிரிழப்பு!

  • April 30, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில்,  இருவர் உயிரிழந்துள்ளதாக  கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும்,  யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி ஐனுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் 28 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று 29 ஆம் திகதி  உயிரிழந்துள்ளார். […]

செய்தி தமிழ்நாடு

இருசக்கர வாகனத்தில் சென்றவரை 5 பேர் வெட்டி விட்டு தப்பி ஓட்டம்

  • April 30, 2023
  • 0 Comments

கடந்த 2022 ஆம் ஆண்டு திருக்கழுக்குன்றத்தில் உள்ள மசூதி தெரு மற்றும் ஜாகிர் ஹுசைன் தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இன்று திருக்கழுக்குன்றத்தில் இருந்து கல்பாக்கம் வரை தனது காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் சர்புதீன் சென்று கொண்டிருந்த […]

தமிழ்நாடு

மலேசியாவிலிருந்து சென்னைக்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்; சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம்!

  • April 30, 2023
  • 0 Comments

மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 22 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார். சோதனை நடத்திய அதிகாரிகள் நீண்ட கம்பிகளால் பாம்புகளை வெளியே எடுக்கும் பொழுது சில பாம்புகள் வெளியே வந்துள்ளது. இது தொடர்பான காணொளியும் வெளியாகி வந்துள்ளது.இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது. கோலாலம்பூரில் இருந்து வந்த பெண் சுங்கத் துறையினரால் கைது […]

உலகம் செய்தி

ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த தலைவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரல்!

  • April 30, 2023
  • 0 Comments

ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த 2011 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற தலைவர்களின் கூட்டு சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. சோதனையின் போது வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய தருணங்களை புதிதாக வெளியிடப்பட்ட  புகைப்படங்களில் காணலாம். அல்கொய்தாவை நிறுவி 9/11 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட பின்லேடன் அமெரிக்க கடற்படை சீல்ஸ் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் உயர் அதிகாரிகள் கைகுலுக்கியதை படங்கள் காட்டுகின்றன. ஜனாதிபதி பராக் ஒபாமா மற்ற உலகத் தலைவர்களை அழைத்து நடந்ததைக் […]

செய்தி தமிழ்நாடு

அள்ளி கொடுத்த அதிமுக வாங்கி சென்ற சிறுவர்கள்

  • April 30, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்அம்பி ஊராட்சி மற்றும் திருப்புட்குழி ஊராட்சி பகுதிகளில் அதிமுக ஒன்றிய துணை செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு கவுன்சிலர் விமல்ராஜ் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றன. காஞ்சிபுரம் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள், முதியோர், குழந்தைகள் வீட்டின் உள்ளே முடங்கி இருப்பதாலும் தொழில் புரிவோர், தொழிற்சாலைக்கு பணிக்கு செல்வோர் வெயிலில் பயணம் செய்யும் நிலையில் அவர்களின் தண்ணீர் தாகம் […]

error: Content is protected !!