இலங்கை

உள்ளுராட்சி தேர்தல் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணை ஒத்திவைப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி  பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புவனேக அலுவிஹாரே,  பிரியந்த ஜயவர்தன,  விஜித் மலல்கொட மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதன் மூலம் […]

மத்திய கிழக்கு

சூடானில் 7 நாட்கள் போர்நிறுத்தம்; இரு தரப்பும் ஒப்புதல்

  • May 3, 2023
  • 0 Comments

சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்து உள்ளது. இதனால், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர். இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன. சூடானில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த பணியில் அமெரிக்கா, […]

செய்தி தமிழ்நாடு

இரட்டைக்கொலை வழக்கில் கொலையாளிகள் கைது

  • May 3, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மாப்படைச்சான் ஊரணி வீதியை சார்ந்தவர் ஆ.பழனியப்பன்((54), கட்டட பொறியாளரான இவருக்கு கரூரில் ஆசிரியையாக பணிபுரியும் உஷா என்ற மனைவியும், சிரிராம் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 23:12:2023 அன்று இரவு பழனியப்பன் பூர்வீக வீட்டில் வசிக்கும் அவரது தாயார் சிகப்பிக்கு(75) உணவு வழங்கசென்றுள்ளார். அப்போது பழனியப்பன் மற்றும் சிகப்பி இருவரும் மர்மநபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டு வீட்டிலிருந்த தங்க நகை 3 1/4 பவுன் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து […]

செய்தி தமிழ்நாடு

விண்ணை முட்டும் அளவிற்கு பக்தி முழங்க தேரோட்டம்

  • May 3, 2023
  • 0 Comments

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும்,பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஹர ஹர சங்கரா சிவாய […]

வட அமெரிக்கா

ஒன்லைனில் விஷம் வாங்கி விபரீத முடிவெடுத்த பிள்ளைகள் ; கைது செய்யப்பட்ட கனேடியர்

  • May 3, 2023
  • 0 Comments

பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முக்கிய திருப்பமாக அந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். 2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் […]

ஆரோக்கியம் இலங்கை

கோவிட் தடுப்பூசி பற்றிய நினைவூட்டல்

  • May 3, 2023
  • 0 Comments

  மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்களில் இருந்து சினோபார்ம் எதிர்ப்பு கோவிட் தடுப்பூசிகளைப் பெறலாம் என்று சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். தேவையான அளவு கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்ட எவரும் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

இலங்கை கல்வி

பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு

  • May 3, 2023
  • 0 Comments

  ஆறாம் படிவப் பரீட்சையின் 52 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கு போதுமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மேலும் 11 பாடங்களுக்கான விண்ணப்ப காலம் நாளை (04) நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

ஆசியா

இந்தோனேசியாவில் மெத்தைக்கு அடியில் கிடைத்த புதையல் – ஆச்சரியத்தில் குடும்பத்தினர்

  • May 3, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவில் பல்லாண்டுகளாகத் தமது மெத்தைக்கு அடியில் இரகசியமாகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்த நபர் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. 74 வயது முதியவர் ஒருவரே இவ்வாறு பணத்தை சேமித்து வைத்துள்ளார். அண்மையில் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் இத்தனை ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்த ரகசியத்தை அவர் அம்பலப்படுத்தினார். உறவினர்கள், அண்டை வீட்டார் என 20க்கும் அதிகமானோர் மெத்தைக்கு அடியில் இருந்த பணத்தை எண்ண உதவியதாக இந்தோனேசிய ஊடகம் தெரிவித்தது. நள்ளிரவு ஒரு மணி வரை விழித்திருந்து அவர்கள் பணத்தை எண்ணியுள்ளனர். […]

இலங்கை செய்தி

மண்ணெண்ணெய் விலையை குறைக்காததற்கு காரணம் இதுதான்

  • May 3, 2023
  • 0 Comments

  தொலைதூர சேவைகள் உள்ளிட்ட தனியார் பஸ்களுக்கு டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுக்க மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படாது என பெற்றோலிய சட்ட நிர்ணய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏழை மக்களின் பயன்பாட்டிற்காக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மண்ணெண்ணெய்யை அதிகளவில் பயன்படுத்தி வருவதாக தெரியவந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மண்ணெண்ணெய் விலை டீசல் விலைக்கு அருகில் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதனால் தோட்ட மக்கள் விறகு பாவனையில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி சுட்டிக்காட்டினார். […]

இலங்கை

வனப்பகுதியில் மூன்று நாட்களாக ஆடையின்றி திரிந்த பெண்!மீட்ட பொலிஸார்

  • May 3, 2023
  • 0 Comments

கம்பளை அம்புலுவா சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர். வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்துள்ளனர். அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் […]

error: Content is protected !!