இலங்கை செய்தி

555 பயணிகளுடன் சுற்றுலாக் கப்பல் திருகோணமலை துறைமுகம் வருகை!

  • February 23, 2026
  • 0 Comments

555 சுற்றுலாப் பயணிகளுடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, “M.V.Crystal Symphony” எனும் கப்பல் இன்று (23) திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இக்கப்பல் மூலம் திருகோணமலையை வந்தடைந்தனர். அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரணை போன்ற பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பஹாமாஸ் நாட்டில் The Bahamas பதிவு செய்யப்பட்டுள்ள இக்கப்பலில் 497 பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன் இவர்கள் திருகோணமலையில் ஒரு நாள் […]

இலங்கை செய்தி

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது!

  • February 23, 2026
  • 0 Comments

மரை இறைச்சி விற்றவர் திருமலையில் கைது! மரை இறைச்சியை குளிர்சாதன பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் எனக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்துள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மொரவெவ இரண்டாம் வாய்க்கால் பகுதியில் வீடொன்றில் மரை இறைச்சி விற்பனை செய்யப்பட்டுவருவதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தகவலுக்கமைய வீட்டை சோதனையிட்ட போது 04 கிலோ 500 கிரேம் மறை […]

இந்தியா தமிழ்நாடு

தமிழக தேர்தல் ஸ்டாலினுக்கும், விஜய்க்கும் இடையிலான போர்!

  • February 23, 2026
  • 0 Comments

நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவை தேர்தலானது விஜய்க்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான போராகும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் இன்று (23) உரையாற்றுகையிலேயே விஜய் இவ்வாறு கூறினார். “மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.” எனவும் விஜய் சுட்டிக்காட்டினார். தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் […]

இலங்கை செய்தி

அடிபணியமாட்டார் நாமல்: மொட்டு கட்சி சூளுரை!

  • February 23, 2026
  • 0 Comments

“ சவால்களை கண்டு அஞ்சும் தலைவன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa அல்லர்.”என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP சூளுரைத்துள்ளது. கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாமல் ராஜபக்சவின் லண்டன் உரைகள் இரத்து செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டப்பட்டது. இதன்போது மொட்டு கட்சி உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும்போதும் இவ்வாறு அன்று எதிர்ப்பு இருந்தது. எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் […]

உலகம்

மத்திய கிழக்கை சுற்றியுள்ள நாடுகளில் ஒரு வலையமைப்பை உருவாக்கும் இஸ்ரேல்!

  • February 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அல்லது அதைச் சுற்றியுள்ள நட்பு நாடுகளின் வலையமைப்பை உருவாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு வருகை தரவுள்ளதை அறிவிக்கும்போது நெதன்யாகு குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். “எனக்கு முன்னால் நான் காணும் பார்வையில், நாங்கள் ஒரு முழு அமைப்பையும் உருவாக்குவோம், அடிப்படையில் மத்திய கிழக்கைச் சுற்றி அல்லது அதற்குள் கூட்டணிகளை உருவாக்குவோம்  எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இஸ்ரேல் மற்றும் இந்தியாவிற்கு இடையில் […]

அரசியல் இலங்கை

லண்டன் உரை இரத்து குறித்து நாமல் அதிருப்தி

  • February 23, 2026
  • 0 Comments

லண்டனில் திட்டமிடப்பட்ட தமது உரைகள் இரத்து செய்யப்பட்டமை துரதிஷ்டவசமான சம்பவம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச x தளத்தில் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் விவாதங்களை தீர்க்கும் இடங்களாக அமைய வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் அதனை மௌனிக்க செய்ய கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் பல தலைமுறை அனுபவத்தை கொண்ட பல்கலைக்கழகங்களில் நடத்தப்படவிருந்த பகிரங்க விவாதங்களில் உரையாற்ற தாம் மிகுந்த ஆவலாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தனது கருத்துக்களை கடுமையாக எதிர்ப்பவர்களுடன், நேரடி விவாதத்தை […]

உலகம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோவின் வழக்கு குறித்து ஆய்வு செய்யும் ICC நீதிமன்றம்!

  • February 23, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே ( Rodrigo Duterte) போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைக்காக முன்னெடுத்த மனித குலத்துக்கு  எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டுமா என்பதை தீர்மானிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விசாரணை இன்று முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், விசாரணை நடத்தவும் போதுமான ஆதாரங்கள் உள்ளதா என்பது தொடர்பில் பரிசீலனை செய்யப்படும். இருப்பினும் மேற்படி விசாரணையின்போது அவர் முன்னிலையாக […]

பொழுதுபோக்கு

ராஷ்மிகாவுக்கு 26 ஆம் திகதி டும்…டும்…டும்!

  • February 23, 2026
  • 0 Comments

தாங்கள் திருமண பந்தத்தில் சங்கமிக்கவுள்ளதை விஜய் தேவரகொண்டா Vijay Deverakonda, ராஷ்மிகா ஜோடி Rashmika முதன் முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி இவர்களின் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 4-ம் ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இவர்களின் இணைவு தொடர்பில் இதற்கு முன்னரும் தகவல்கள் வெளியாகி இருந்தாலும், தற்போதே அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இருவருமே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்தக் கடிததிற்கு […]

இலங்கை செய்தி

GSP+ வரிச்சலுகையை தக்க வைப்பதில் இலங்கை தீவிரம்!

  • February 23, 2026
  • 0 Comments

ஜி.எஸ்.பி. பிளஸ் GSP+ வரிச்சலுகையை தக்க வைத்துக்கொள்வதற்குரிய முயற்சியில் இலங்கை தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தால் European Union இலங்கைக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இவ்வருடத்துடன் காலாவதியாகியுள்ளது. இந்நிலையிலேயே அச்சலுகையை நீடித்துக்கொள்வதற்குரிய இராஜதந்திர முயற்சி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் Emmanuel Macron ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க Anura Kumara Dissanayake நடத்திய சந்திப்பின்போது இது பற்றி பேசப்பட்டது. புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சு […]

இலங்கை செய்தி

பிரதான உரைகள் ரத்து: எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் லண்டன் சென்றார் நாமல்!

  • February 23, 2026
  • 0 Comments

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa, லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டனில் அவர் பௌத்த விகாரையில் வழிபடுவது தொடர்பான படங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. முக்கிய இரு உரைகள் மற்றும் சில சந்திப்புகளுக்காக நாமல் ராஜபக்ச லண்டன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், நாமலின் லண்டன் உரைகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. இந்நிலையில் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தொடர்பான […]

error: Content is protected !!