உலகம் செய்தி

போண்டி துப்பாக்கிச்சூடு : தவறான பிரச்சாரத்திற்கு பலியான பாகிஸ்தான்!

  • December 17, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தனது நாடு தவறான பிரச்சாரத்திற்கு பலியாகியுள்ளதாக பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்ற தவறான கூற்றுகளை ஆன்லைனில் பலர் பரப்பிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில்  இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய  செய்தி தொடர்பாளர்  அத்தாவுல்லா தரார் (Attaullah Tarar) மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  ஹனுக்காவைக் கொண்டாடும் யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை […]

அரசியல் இலங்கை செய்தி

சர்வதேச விவகாரங்களில் இலங்கைக்கு துணை நிற்கும் சீனா!

  • December 17, 2025
  • 0 Comments

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களின்போது இலங்கையுடன் நெருக்கமாகச் செயல்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. சீன தேசிய மக்கள் காங்கிரஸின் நிரந்தரக் குழுவின் உப தலைவர் வாங் டோங்மிங் (Wang Dongming) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். கொழும்பு வந்துள்ள வாங் டோங்மிங்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவு, மற்றும் எதிர்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டிய துறைகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் […]

பொழுதுபோக்கு

D55 லேட்டஸ்ட்: மாரி செல்வராஜ் செதுக்கும் வரலாற்றுப் படைப்பு – ஆச்சரியத்தில் தனுஷ் ரசிகர்கள்!

  • December 17, 2025
  • 0 Comments

‘கர்ணன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணையவுள்ள #D55 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தைப் பற்றிய இரண்டு மிக முக்கியமான தகவல்கள் கசிந்துள்ளன. முதல் முக்கியமான செய்தி என்னவென்றால், இப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட பீரியட் டிராமா (Period Drama) ஆக உருவாகவுள்ளது. மாரி செல்வராஜின் முந்தைய படங்கள் சமூக அரசியல் பேசினாலும், அவை சமகாலத்தைச் சார்ந்தவையாக இருந்தன. ஆனால், #D55 […]

செய்தி விளையாட்டு

பனிமூட்டம் காரணமாக 4வது டி20 போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்

  • December 17, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடரில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநில தலைநகர் லக்னோவில்(Lucknow) நான்காவது போட்டி ஆரம்பமாக இருந்தது. இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக உத்தரப்பிரதேசத்தில் நேற்று பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட வாகன விபத்தில் […]

உலகம்

தங்க விலை 2026ஆம் ஆண்டில் மிகவும் உயரும்: ஆய்வாளர்கள் கணிப்பு

  • December 17, 2025
  • 0 Comments

2026ஆம் ஆண்டு தங்கத்தின் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அதன் வணிகத்தை ஆய்வு செய்யும் நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த 2025ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தங்க விலை கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. மத்திய வங்கியின் போக்கு, அரசாங்க கொள்கை மாற்றம், உலகளாவிய வணிகர்களின் வர்த்தக நடவடிக்கைகள் அதற்கான காரணம் என்று அறியப்படுகிறது. தங்கம் முதலீடு செய்வோர் மிதமான லாபத்தையே எதிர்பார்க்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அடுத்த ஆண்டு இறுதிக்குள்ளாக ஒரு கிராம் தங்கம் 200 டொலரை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

“ரஷ்யாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டால்” – புட்டின் விடுத்த எச்சரிக்கை!

  • December 17, 2025
  • 0 Comments

உக்ரைன் மற்றும் மேற்கத்தேய நட்பு நாடுகள், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ரஷ்யாவின் கோரிக்கைகளை நிராகரித்தால், மொஸ்கோ உக்ரைனில் தனது ஆதாயங்களை நீட்டிக்க முயற்சிக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியது. இந்தபோர்  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. போரை நிறைவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல சுற்று பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக சமீபத்தில் 28 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கிய அமைதி ஒப்பந்தம் […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கைக்கான இந்திய தூதுவரை ஜீவன் அவசரமாக சந்தித்தது ஏன்?

  • December 17, 2025
  • 0 Comments

இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் இதன்போது நன்றி தெரிவித்தார் என்று இந்திய தூதரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட மலையகத்தில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்திய தூதுவருக்கு ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார். இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமானிடம் இந்திய […]

இந்தியா

இந்தியாவில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் பலி!

  • December 17, 2025
  • 0 Comments

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் (Expressway) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது. அடர்ந்த மூடுபனி காரணமாக ஏறக்குறைய எட்டு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலைத் தொடர்ந்து, வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும், அவர்கள் வெளியே வர முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் […]

இலங்கை செய்தி

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி கொள்கையை உருவாக்க திட்டம்: கொழும்பில் விசேட கூட்டம்!

  • December 17, 2025
  • 0 Comments

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) கொள்கையை உருவாக்குவது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் இக்கூட்டம் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை உருவாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். தேசிய பாதுகாப்பு நோக்கங்களை முன்னேற்றுவது பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்துள்ளார். தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் மேலும் சில நாட்களுக்கு மூடப்படும் லூவ்ரே அருங்காட்சியகம் (Louvre Museum)!

  • December 17, 2025
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியக  (Louvre Museum)  ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த நடவடிக்கை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் பலர் ஆதரவாக  வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறித்த அருங்காட்சியகம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியத்தில் அண்மையில்  இடம்பெற்ற மோசமான கொள்ளை சம்பவம், பாதுகாப்பு அச்சுறுத்தல், நீர் கசிவு, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த நடவடிக்கையை  முன்னெடுத்துள்ளனர். கலாச்சார […]

error: Content is protected !!