உலகம் செய்தி

மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்வதை சட்டபூர்வமாக்கும் நியூயார்க்

  • December 17, 2025
  • 0 Comments

ஆளுநருக்கும் மாநில பாராளுமன்ற தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், மரணமடையும் நிலையில் உள்ளவர்களுக்கு மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்வதை சட்டப்பூர்வமாக்குவதற்கான சமீபத்திய மாநிலமாக நியூயார்க்(New York) மாற உள்ளது. ஆளுநர் கேத்தி ஹோச்சுல்(Gov. Kathy Hochul), சட்டமியற்றுபவர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்ட பிறகு, இந்த திட்டத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்தார் என்று அல்பானி டைம்ஸ்(Albany Times) செய்தி வெளியிட்டுள்ளது. வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, பல பிற மாநிலங்களும் கொலம்பியா(Columbia) மாவட்டமும் மருத்துவ உதவியுடன் தற்கொலையை அனுமதிக்கும் சட்டங்களைக் கொண்டுள்ளன. […]

இந்தியா செய்தி

கர்நாடகாவில் பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிக்க தடை

  • December 17, 2025
  • 0 Comments

கர்நாடக(Karnataka) அரசு, மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு பொது இடங்களில் புறாக்களுக்கு உணவளிப்பதை ஒழுங்குபடுத்தவும் தடை செய்யவும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பொது சுகாதாரக் கவலைகளை சுட்டிக்காட்டி, அரசு துணைச் செயலாளர் வி. லட்சுமிகாந்த்(V. Laxmikanth), நகர்ப்புற மேம்பாட்டுத் துறைக்கு கடிதம் எழுதி, பெங்களூரு(Bengaluru) மாநகராட்சி மற்றும் அனைத்து மாநகராட்சிகளுக்கும் இந்த நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். பொது இடங்களில் புறாக்களுக்கு கட்டுப்பாடில்லாமல் உணவளிப்பதால் பறவைகள் அதிக அளவில் கூடுவது, அதிகப்படியான கழிவுகள் காரணமாக சுவாச […]

உலகம் செய்தி

முன்னாள் ஹார்வர்டு தொழிலாளிக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை

  • December 17, 2025
  • 0 Comments

புகழ்பெற்ற ஹார்வர்ட்(Harvard) மருத்துவப் பாடசாலையின் முன்னாள் பிணவறை(Mortuary) மேலாளருக்கு, அறிவியல் ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்ட உடல் பாகங்களைத் திருடி விற்றதற்காக எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. 2018 முதல் மார்ச் 2020 வரை உள் உறுப்புகள், மூளை, தோல், கைகள் மற்றும் துண்டிக்கப்பட்ட தலைகள் உள்ளிட்ட திருடப்பட்ட எச்சங்களை கடத்தியதாக 58 வயதான செட்ரிக் லாட்ஜ்(Cedric Lodge) குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து மே 2023ல் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டார் என்று […]

செய்தி விளையாட்டு

கடும் பனிமூட்டம் காரணமாக 4வது டி20 போட்டி ரத்து

  • December 17, 2025
  • 0 Comments

பிரபல தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் தொடரில் இந்திய அணி 2-1 கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இன்று உத்தரபிரதேச(Uttar Pradesh) மாநில தலைநகர் லக்னோவில்(Lucknow) நான்காவது போட்டி ஆரம்பமாக இருந்தது. இந்நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் குழு தெரிவித்துள்ளது. மேலும், இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான டி20 போட்டி […]

உலகம் செய்தி

எத்தியோப்பியாவில் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட உயரிய விருது

  • December 17, 2025
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஜோர்டான்(Jordan), எத்தியோப்பியா(Ethiopia), ஓமன்(Oman) ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது நரேந்திர மோடிக்கு, ​​மிக உயர்ந்த குடிமகன் விருதான தி கிரேட் ஹானர் நிஷான் ஆஃப் எத்தியோப்பியா(Great Honour Nishan of Ethiopia) வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற பிறகு பேசிய பிரதமர் மோடி, “மிகவும் பழமையான மற்றும் வளமான நாகரிகத்தால்” கௌரவிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து இந்தியர்களின் சார்பாகவும் இந்த விருதை […]

பொழுதுபோக்கு

ஜீ5 கையில் ‘பராசக்தி’! சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா படத்தின் ஓடிடி உரிமை இவ்வளவு கோடியா?

  • December 17, 2025
  • 0 Comments

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா முதல் முறையாக இணையும் திரைப்படம் ‘பராசக்தி’. அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் ஓடிடி (OTT) உரிமம் குறித்த ஒரு பிரம்மாண்டமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டுகள் வெளியாவதற்கு முன்பே, இதன் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற முன்னணி ஓடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ஜீ5 (Zee5) […]

உலகம்

இரண்டாம் முறை ‘மில்லியன் ஜாக்பாட்’ வென்ற பிரிட்டன் தம்பதி

  • December 17, 2025
  • 0 Comments

ஒரு பிரிட்டன் தம்பதி, அரிதினும் அரிதாக இரண்டாம் முறையாக ‘லோட்டோ’ என அழைக்கப்படும் ‘ஜாக்பாட் லாட்டரி’ போட்டியில் $1.7 மில்லியன் வென்றுள்ளனர். கடந்த நவம்பர் 26ஆம் திகதி நடந்த அந்த லாட்டரி போட்டியில் அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டு, உலகெங்கும் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். திரு ரிச்சர்ட் டேவிஸ், அவரது மனைவி ஃபெயி ஸ்டீவன்சன் தம்பதி, கடைசியாக 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த போட்டியில் இதேபோன்று S$1.7 (£1 million) வென்றுள்ளனர். “எங்களுக்கு மீண்டும் பரிசு […]

உலகம் செய்தி

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மருத்துவ அறிக்கை வெளியீடு

  • December 17, 2025
  • 0 Comments

நுரையீரல் மற்றும் இதயத்திற்கு மார்பு தொற்று நோயால் தீவிர சிகிச்சைப் பிரிவில்(ICU) சிகிச்சை பெற்று வரும் வங்கதேச(Bangladesh) முன்னாள் பிரதமர் கலிதா ஜியா(Khaleda Zia) சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்று அவரது மருத்துவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக அவர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவாரா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80 வயதான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவர், பல உடல்நலக் கோளாறுகளுக்காக நவம்பர் 23 முதல் டாக்காவில்(Dhaka) உள்ள […]

உலகம் செய்தி

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் டாக்காவில் உள்ள விசா மையத்தை மூடிய இந்தியா

  • December 17, 2025
  • 0 Comments

மோசமடைந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், டாக்காவில்(Dhaka) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்பட்டுள்ளது. டாக்காவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமீபத்தில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வங்காளதேச(Bangladesh) அரசியல் தலைவர்களின் இந்தியாவிற்கு(India) எதிரான அறிக்கைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. “தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டாக்காவில் உள்ள ஜமுனா ஃபியூச்சர் பார்க்கில்(Jamuna Future Park) உள்ள இந்திய விசா விண்ணப்ப மையம் மூடப்படுகிறது என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம். இன்று […]

உலகம் செய்தி

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த புலம்பெயர்ந்தோர் கைது!

  • December 17, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்த 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியேற்ற மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளால் நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் (Johannesburg) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய குடியேற்ற சீர்த்திருத்தங்களின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. சுற்றுலா விசாக்களில் வருகை தந்த குறித்த ஏழு பேரும் நிறுவனம் ஒன்றில் சட்டவிரோதமாக பணிப்புரிந்து வந்ததாக உள்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த சோதனை […]

error: Content is protected !!