போண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இஸ்லாமிய அரசு வெளியிட்ட அறிக்கை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய அரசு வரவேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இஸ்லாமிய பயங்கரவாத குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், தாக்குதல்தாரிகளை பாராட்டியுள்ளது. தாக்குதல்தாரிகளை சிங்கங்கள் என வர்ணித்துள்ளதுடன், ‘பெருமையின் ஆதாரம்’ என்றும் புகழ்ந்துள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த ஜோடி அதன் போதனைகளால் ‘ஈர்க்கப்பட்டிருக்கலாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளது. போண்டி கடற்கரையில் ஹனுக்காவின் முதல் நாளைக் கொண்டாடிய யூத மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான […]













