ஐரோப்பா

உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ஏவுகணை தாக்குதல் – 08 பேர் பலி!

  • December 20, 2025
  • 0 Comments

தெற்கு உக்ரைனின் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பு மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அவசர சேவை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் பல வாகனங்கள் தீக்கிரையாகியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். துறைமுகம் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக ஒடேசா பிராந்தியத்தின் தலைவர் ஓலே கிப்பர் ( Oleh Kiper) கூறினார். இந்த தாக்குதல் தொடர்பில் ரஷ்யா […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் வியூகத்தில் சிக்கிக்கொள்ளும் ஆங்கிலக்கால்வாய் – புலனாய்வாளர்கள் எச்சரிக்கை!

  • December 20, 2025
  • 0 Comments

மத்தியதரைக் கடலில் ரஷ்ய டேங்கர் கப்பல் ஒன்று தாக்கப்பட்டதைத் தொடர்ந்து,  போரின் உச்சத்தில் ஆங்கிலக் கால்வாய் சிக்கிக் கொள்ளக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய எண்ணெய் டேங்கர்களுக்கு எதிரான உக்ரைனின் கடல்-ட்ரோன் தாக்குதல் பிரச்சாரம் இப்போது கருங்கடலுக்கு அப்பாலும்  பரவியுள்ளது. ஓமன் கொடியுடன் கூடிய “நிழல் கடற்படை” கப்பல் நேற்று தாக்கப்பட்டதும் சுட்டிக்காட்டத்தக்கது. இவ்வாறாக அங்கீகரிக்கப்பட்ட டேங்கர் கப்பல்கள்,  கடற் பகுதிகளில் குறிவைக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பால்டிக் […]

அரசியல் இலங்கை செய்தி

திங்களன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

  • December 20, 2025
  • 0 Comments

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் எதிர்வரும் திங்கட்கிழமை (22) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டியே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார். இலங்கைக்கான மேலதிக உதவித் திட்டங்கள் தொடர்பான அறிவிப்பையும் அவர் வெளியிடவுள்ளார் என தெரியவருகின்றது. இலங்கைக்கு உயர்மட்ட பிரதிநிதியொருவரை சீனா அனுப்பி இருந்த நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இடம்பெறுகின்றது.

இந்தியா செய்தி

டெல்லி – இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் 100 விமானங்கள் இரத்து!

  • December 20, 2025
  • 0 Comments

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுப்பாடு காரணமாக தெளிவுத்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 66 வருகை விமானங்களும், 63 புறப்பாடுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் தொடர்ந்து மூடுபனி சூழ்ந்துள்ளதால், இந்திரா காந்தி சர்வதேச (IGI) விமான நிலையம் பயணிகள் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. விமானப் போக்குவரத்து குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களைத் தொடர்பு […]

அரசியல் இலங்கை செய்தி

ஜே.வி.பியுடன் விமல் அரசியல் போர்: கடும் விமர்சனக் கணைகள் தொடுப்பு!

  • December 20, 2025
  • 0 Comments

ஜே.வி.பியானது அதன் ஆரம்பகால கொள்கைகளில் இருந்து தற்போது திசைமாறி பயணித்துக்கொண்டிருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி. ஊடாகவே தனது அரசியல் பயணத்தை விமல் வீரவன்ச ஆரம்பித்தார். எனினும், அவரின் சர்ச்சைக்குரிய நடவடிக்கை காரணமாக அவரை கட்சியை விட்டு வெளியேறும் முடிவை ஜே.வி.பி. எடுத்திருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகி, […]

உலகம் செய்தி

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா ஆகியோருக்கு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிப்பு!

  • December 20, 2025
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகியோருக்கு பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம்  சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு சவுதி அரசாங்கத்திடமிருந்து பரிசுகளை பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ராவல்பிண்டியின் உயர் பாதுகாப்பு கொண்ட அடியாலா(Adiala) சிறையில் நடந்த விசாரணையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷாருக் அர்ஜுமந்த் ( Shahrukh Arjumand) […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

போண்டி தாக்குதல்: நாளை ஆஸ்திரேலியாவில் தேசிய துக்க தினம்

  • December 20, 2025
  • 0 Comments

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக, நாளை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அனைத்து அரசு கட்டிடங்களிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் இடம்பெற்ற அதே நேரமான மாலை 6.47 மணிக்கு, நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாள் தேசிய […]

ஐரோப்பா செய்தி

UKவில் பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் புகலிடக் கோரிக்கையாளருக்கு 09 ஆண்டுகள் சிறை!

  • December 20, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு 09 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி எரித்திரிய நாட்டு (Eritrean) புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர், மார்கேட் (Margate) கடற்கரையில் தனியாக நடந்து சென்ற பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமர் முகமது என அறியப்படும் சந்தேகநபர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு  நேற்று கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றத்தில் (Canterbury […]

இலங்கை செய்தி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி ரூ. 50 மில்லியன் டொலர் நிதி உதவி

  • December 20, 2025
  • 0 Comments

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று அங்கீகாரம் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசாங்க சேவைகள் நவீனமயமாக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் மற்றும் வணிகங்கள் அரசாங்க சேவைகளை ஒரே இணையத்தளத்தின் ஊடாக இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும். குறிப்பாக, அரச நிறுவனங்களுக்கு இடையே தகவல்களைப் பாதுகாப்பாகப் பரிமாறிக்கொள்வதற்கும், டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்கும் புதிய நவீன தரவுத் தளங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த நிதி […]

உலகம் செய்தி

ஈஸிஜெட் விமானத்தில் இறந்த நிலையில் பயணித்த பெண் – 12 மணிநேரம் காத்திருந்த பயணிகள்!

  • December 20, 2025
  • 0 Comments

ஈஸிஜெட் விமானத்தில் குடும்பம் ஒன்று  இறந்த பயணி ஒருவரை அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து உறவினர்கள் 89 வயதான இறந்த பயணியை விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு,  ஊழியர்கள் அந்தப் பெண்ணின் நிலையைப் பற்றி பலமுறை கேள்வி எழுப்பியதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் உறவினர்கள் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக பொய்யுரைத்துள்ளனர். விமானம் ஓடுபாதையை நோக்கி நகரத் தொடங்கியபோதுதான், கேபின் குழுவினர் அந்தப் பெண் இறந்துவிட்டதை அறிந்துள்ளனர். இந்நிலையில் கேட்விக் செல்லும் விமானம் […]

error: Content is protected !!