உலகம் செய்தி

நிலவுக்குச் செல்லும் உங்கள் பெயர் ; நாசா வழங்கும் ஒரு அரிய வாய்ப்பு

  • January 19, 2026
  • 0 Comments

நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆர்டெமிஸ் II (Artemis II) விண்வெளி பயணத்தின் ஒரு பகுதியாக, உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்களின் பெயர்களை விண்வெளிக்கு அனுப்பும் அரிய வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. “ஆர்ட்டெமிஸ் II உடன் உங்கள் பெயரை அனுப்பவும்.(Send Your Name with Artemis II) ” எனப்படும் இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் நபர்களின் பெயர்கள், நிலாவைச் சுற்றி பயணம் செய்ய உள்ள ஓரியன் (Orion) விண்கலத்தில் இடம்பெறவுள்ளன. ஆர்டெமிஸ் II […]

ஐரோப்பா செய்தி

ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளுக்கு பிரித்தானியா ஆதரவு

  • January 19, 2026
  • 0 Comments

வர்த்தகப் போர் எவருடைய நலனுக்கும் உதவாது என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சில புவிசார் முயற்சிகளை பிரித்தானியா ஆதரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக காசாவில் போர்நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கு பிரித்தானியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா, உக்ரைன் மற்றும் பிற நட்பு நாடுகளுடன் […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் தெரு விளக்கு கேமராக்களில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது

  • January 19, 2026
  • 0 Comments

தெற்கு லண்டனின் குரோய்டன் (Croydon) பகுதியில் நடத்தப்பட்ட நேரடி முக அங்கீகார தொழில்நுட்ப (LFR) சோதனை, கொள்ளை போன்ற குற்றங்களை குறைக்க உதவியுள்ளதாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை மூலம் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டத்தில், மொபைல் வேன்களுக்குப் பதிலாக தெரு விளக்கு கம்பங்களில் நிலையான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை பொதுமக்களின் முகங்களை கண்காணிப்பு பட்டியலில் உள்ள குற்றவாளிகளின் முகங்களுடன் ஒப்பிடுகின்றன. கைதானவர்களில் […]

ஐரோப்பா செய்தி

கன்சர்வேடிவிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ரோசிண்டெல் – ரிஃபார்ம் யுகேவில் இணைந்தார்

  • January 19, 2026
  • 0 Comments

ரோம்ஃபோர்டு (Romford) தொகுதி எம்.பி.யும் முன்னாள் நிழல் அமைச்சருமான ஆண்ட்ரூ ரோசிண்டெல்(Andrew Rosindell), கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து சீர்திருத்த UK கட்சியில் இணைந்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்பேற்க மறுப்பதாகவும், நாட்டின் சரிவுக்கு காரணமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இரவு நைகல் ஃபரேஜுடன் (Nigel Farage) கலந்துரையாடியதைத் தொடர்ந்து அந்த கட்சியில் இணைந்ததாக ரோசிண்டெல் (Rosindell) தெரிவித்துள்ளார். அவர் சிறந்த தேசபக்தர் எனவும் தனது கட்சிக்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவு டென்மார்க் இராச்சியத்திற்கும் மட்டுமே சொந்தமானது – ஸ்டார்மர்

  • January 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது திட்டத்தை எதிர்க்கும் பிரித்தானியா மற்றும் பிற நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரிகளை விதிக்கும் திட்டம் “முற்றிலும் தவறானது” என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். டவுனிங்கில் (Downing) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த முடிவு “கிரீன்லாந்து மக்களுக்கும் டென்மார்க் இராச்சியத்திற்கும் மட்டுமே சொந்தமானது” எனவும் ஸ்டார்மர் கூறுகிறார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “அமெரிக்காவுடன் ஒரு நல்ல […]

உலகம் செய்தி

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு ; பிரதமர் தகைச்சியின் அதிரடி முடிவு

  • January 19, 2026
  • 0 Comments

ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே தகைச்சி (Sanae Takaichi), எதிர்வரும் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான தனது புதிய திட்டங்களுக்கு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த இடைத்தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழவைக்கு நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், தகைச்சியின் தலைமைத்துவத்திற்கு ஒரு முக்கிய சோதனையாகக் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த […]

உலகம்

சீனாவில் நலிவுறும் பிறப்பு விகிதம் – திண்டாடும் அரசு!

  • January 19, 2026
  • 0 Comments

சீனாவின் பிறப்பு விகிதங்களை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு சலுகைகளை வழங்கிய போதிலும், கடந்த 2025 ஆம் ஆண்டில் நான்காவது ஆண்டாக மக்கள் தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் மக்கள் தொகை 3.39 மில்லியன் குறைந்து 1.4 பில்லியனை எட்டியதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. இது முந்தைய ஆண்டை விட விரைவான சரிவைக் குறிக்கிறது என்று அரசாங்கம் இன்று வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1,000 பேருக்கு 8.04 ஆக […]

இலங்கை செய்தி

டிட்வா சூறாவளி இழப்பீடு வழங்குவதில் சிக்கல்

  • January 19, 2026
  • 0 Comments

டிட்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் திட்டத்திலிருந்து விலகுவதாகக் கிராம உத்தியோகத்தர்கள் அறிவித்துள்ளனர். அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய சுற்று நிருபத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், இதனால் இழப்பீடுகளைத் தீர்மானிப்பதில் கிராம உத்தியோகத்தர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க, முறையான வழிகாட்டல்கள் இன்றி இந்தப் பணிகளைத் தொடரப்போவதில்லை என திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கிராம உத்தியோகத்தர்களின் […]

ஆஸ்திரேலியா

அச்சுறுத்தும் சுறா: சிட்னியில் 20 கடற்கரைகளுக்கு பூட்டு!

  • January 19, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னியில் வடக்கு கடற்பகுதியில் 20 கடற்கரைகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்துக்குள் மூவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மறு அறிவித்தல் விடுக்கப்படும்வரை மேற்படி 20 கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிட்னி வடக்கு கடற்கரை பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 20 வயது இளைஞர் ஒருவர் அலை சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அவ்வேளையிலேயே அவர் சுறா தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு […]

இந்தியா செய்தி

காஷ்மீர் மற்றும் லடாக்கில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • January 19, 2026
  • 0 Comments

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை சுமார் 5.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் ஸ்ரீநகர், லே மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக உணரப்பட்டதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, இந்த நிலநடுக்கம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில், சுமார் 200 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது. காஷ்மீர் மற்றும் லடாக் தவிர, டெல்லி உள்ளிட்ட […]

error: Content is protected !!