அரசியல் இலங்கை செய்தி

அரசின் ஆயுள் மக்கள் கைகளுக்குள்: கோட்டா ஆட்சியை உதாரணம் காட்டுகிறார் ராஜித!

  • January 5, 2026
  • 0 Comments

“ஆட்சியைக் கவிழ்ப்பது மக்களின் பணி, அதனை நாம் செய்யமாட்டோம்.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார். புத்தாண்டில் எதிரணியின் அரசியல் செயல்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் அனுப்பினார்கள். எனவே, அரசாங்கத்தின் ஆயுளென்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. […]

ஐரோப்பா

அமெரிக்காவின் அடுத்த இலக்காக மாறும் கிரீன்லாந்து : அவசரமாக விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலாவை அமெரிக்கா ஆக்கிரமித்துள்ள நிலையில், கீரீன்லாந்தை கைப்பற்றக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த டென்மார்க் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. டென்மார்க் இராச்சியத்தில் உள்ள மூன்று நாடுகளில் ஒன்றை இணைக்க அமெரிக்காவிற்கு எந்த உரிமையும் இல்லை […]

அரசியல் இலங்கை செய்தி

டக்ளஸ்,பிள்ளையானுக்காக நாமல் களத்தில்!

  • January 5, 2026
  • 0 Comments

“புலி டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவே டக்ளஸ், பிள்ளையான் போன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “புலிப் பயங்கரவாதத்துக்கு எதிராக ஜனநாயக வழியில் அரசியலுக்கு வந்தவர்தான் டக்ளஸ் தேவானந்தா. மக்கள் வாக்கு மூலம் நாடாளுமன்றம் வந்து, வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றியுள்ளார். எனினும், புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்துவதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே பிள்ளையானும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஜனநாயக […]

அரசியல் இலங்கை செய்தி

பிரதமர் பதவி விலக வேண்டியதில்லை: மஹிந்த

  • January 5, 2026
  • 0 Comments

“ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என நான் கூறமாட்டேன்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தெரிவித்தார். தரம் 6 மாணவர்களுக்குரிய ஆங்கில பாடப்புத்தகத்தில் வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சு பதவியை வகிக்கும் பிரதமர் பதவி விலக வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் வினவப்பட்டது. […]

உலகம்

மதுரோவிற்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பம் – நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் இன்று (05)  அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 03 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கையின் கீழ் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நியூயார்க்கிற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர். போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத சதி, ஆயுதங்கள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் மற்றும்   அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான  […]

அரசியல் இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அதிரடி!

  • January 5, 2026
  • 0 Comments

“அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக இலங்கையில் போராட்டம் நடத்தப்படும்.” இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார Vasudeva Nanayakkara தெரிவித்தார். வெனிசுலாமீதான ட்ரம்பின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இடதுசாரி சக்திகளுடன் இணைந்து கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் எனவும் அவர் கூறினார். எனினும், திகதி விவரம் தொடர்பான தகவல்களை வாசுதேவ நாணயக்கார வெளியிடவில்லை. “ எண்ணெய் வளம்மீதான பேராசை காரணமாகவே வெனிசுலாமீது ட்ரம்ப் தாக்குதல் நடத்தியுள்ளார். ட்ரம்பின் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட 27 வயது இந்தியப் பெண்

  • January 4, 2026
  • 0 Comments

புத்தாண்டு தினத்தன்று காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்த 27 வயது இந்தியப் பெண் ஒருவர் மேரிலாந்தில்(Maryland) உள்ள தனது முன்னாள் காதலனின் அடுக்குமாடி குடியிருப்பில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் எலிகாட்(Ellicott) நகரத்தைச் சேர்ந்த தரவு மற்றும் மூலோபாய ஆய்வாளரான(data and strategy analyst) நிகிதா கோடிஷாலா(Nikita Godishala) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஹோவர்ட்(Howard) கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் உடல் அவரது முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மாவுக்குச்(Arjun Sharma) சொந்தமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் […]

உலகம் செய்தி

நைஜீரியாவில் 31.5 கிலோ கோகைனுடன் 22 இந்திய கப்பல் பணியாளர்கள் கைது

  • January 4, 2026
  • 0 Comments

நைஜீரியாவின்(Nigeria) லாகோஸின்(Lagos) பிரதான துறைமுகத்தில் ஒரு வணிகக் கப்பலில் 31.5 கிலோகிராம் கோகைன்(cocaine) கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் 22 இந்திய(India) பணியாளர்களை கைது செய்ததாக போதைப்பொருள் அமலாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்ஷல்(Marshall ) தீவுகளில் இருந்து வந்த எம்.வி. அருணா ஹுல்யா(MV Aruna Hulya) கப்பலில் இந்த பெருந்தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க அமைப்பின்(NDLEA) செய்தித் தொடர்பாளர் ஃபெமி பாபாஃபெமி(Femi Babafemi) ஒரு அறிக்கையில் இந்த பறிமுதலை உறுதிப்படுத்தினார். ஐரோப்பா மற்றும் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதல்களால் மூடப்பட்ட மாஸ்கோ விமான நிலையங்கள்

  • January 4, 2026
  • 0 Comments

ரஷ்ய(Russia) தலைநகரில் உக்ரைன் பல ட்ரோன்களை ஏவியதை அடுத்து, மாஸ்கோவில்(Moscow) மூன்று விமான நிலையங்கள் விமானப் போக்குவரத்திற்கு மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல்கள் மாஸ்கோவின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான வுனுகோவோ(Vnukovo) உட்பட பல விமான தாமதங்களுக்கு வழிவகுத்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “விமானப் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுப்பாடுகள் அவசியம்” என்று ரஷ்ய விமான ஒழுங்குமுறை ஆணையமான ரோசாவியாட்சியாவின்(Rosaviatsia) செய்தித் தொடர்பாளர் ஆர்டெம் கொரென்யாகோ(Artem Korenyako) குறிப்பிட்டுள்ளார். தலைநகரை நோக்கிச் சென்ற குறைந்தது […]

இந்தியா செய்தி

நொய்டாவில் தென் கொரிய காதலனை கொலை செய்த மணிப்பூர் பெண்

  • January 4, 2026
  • 0 Comments

நொய்டாவில்(Noida) தென் கொரிய(South Korea) ஆடவர் ஒருவர் மணிப்பூரைச்(Manipur) சேர்ந்த அவரது துணைவியாரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டக் ஹீ யூ(Tak Hee Yoo) என அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவரை தாக்குதலை தொடர்ந்து அவரது துணைவியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார், ஆனால் அவர் வரும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லுன்ஜீனா பமாய்(Lunjina Pamai) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர், விசாரணையின் போது, ​​டக் ஹீ மது அருந்திய பிறகு அடிக்கடி தன்னைத் தாக்கியதாகவும் […]

error: Content is protected !!