பொழுதுபோக்கு

பாலிவூட்டின் “கிங்” சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் இத்தனை கோடிகளா?

  • November 2, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். 50 வயதிலும் ஸ்மார்ட்டாகவும் ஃபிட்டாகவும் அழகாகவும் இருக்கும் இவர், இன்று வரை தனது கேரியலில் முன்னிலையில் இருக்கின்றார். பாலிவுட்டின் கிங் கான் என்று அழைக்கப்படும் இவருக்கு ரசிகர் பட்டாளம் உலகளவில் உள்ளனர். துபாயின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த முறை, மன்னத்தில் வீடு புதுப்பிக்கும் பணிகள் நடப்பதால், அவரது பிறந்தநாள் அலிபாக்கில் கொண்டாடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

இலங்கை

எம்.பிகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பின்னரே பாதுகாப்பு வழங்கப்படும்!

  • November 2, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு வழங்க  கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அச்சுறுத்தல்களை மதிப்பீடு செய்த பிறகே அந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும்  என  காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) பிரியந்த வீரசூரிய விளக்கமளித்துள்ளார். தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு தொடர்பில் துப்பாக்கிகளை வழங்குமாறு 20 எம்.பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு வெறுமனே கோரிக்கையின் பேரில் […]

உலகம்

நைஜீரியாவிற்கு துருப்புக்களை அனுப்ப தயாராகும் ட்ரம்ப் – அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

  • November 2, 2025
  • 0 Comments

நைஜீரியாவில் (Nigeria)இஸ்லாமிய தீவிரவாதிகளை ஒழிக்க இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். தீவிரவாதக் குழுக்கள் நைஜீரியாவில் (Nigeria) கிறிஸ்தவர்களைக் கொன்று அவர்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து வருகின்றன, ஆனால் நைஜீரிய (Nigeria)  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று ட்ரம்ப் கூறினார். அமெரிக்க தாக்குதல்கள் விரைவாகவும் கடுமையாகவும் மாறுவதற்கு முன்பு நைஜீரிய (Nigeria)அரசாங்கம் விரைவாக நடவடிக்கை எடுப்பது நல்லது என்று டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இல்லையென்றால் […]

உலகம் செய்தி

ஜமைக்காவில் (Jamaica) வீடுகளை இழந்து தவிப்போருக்காக நிதி திரட்டும் பிரித்தானியா!

  • November 2, 2025
  • 0 Comments

ஜமைக்காவில் (Jamaica) வீடுகளை இழந்து தவிப்போருக்காக பிரித்தானியா நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக மனிதாபிமான உதவிக்காக 2.5 மில்லியன்களை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் மேலதிகமாக £5  மில்லியன் வரை சேகரிக்க இலக்கு வைத்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புதிய நிதி, வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் மின்சாரம் இல்லாதவர்களுக்கும் உதவுவதற்காக வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதேவேளை ஜமைக்காவை (Jamaica) தாக்கிய மெலிசா (Melissa) சூறாவளியால் 28 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மெலிசா சூறாவளியால் நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. […]

உலகம் செய்தி

இருண்ட இடத்தில் அமெரிக்கா – சாடும் ஒபாமா!

  • November 2, 2025
  • 0 Comments

“நமது நாடும் நமது கொள்கையும் இப்போது மிகவும் இருண்ட இடத்தில் உள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். வர்ஜீனியா (Virginia) மற்றும் நியூ ஜெர்சி (New Jersey) ஆகிய மாநிலங்களுக்கான ஆளுநர் வேட்பாளர் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், எங்கிருந்து தொடங்குவது என்று தெரிந்து கொள்வது கடினம். ஏனென்றால் வெள்ளை மாளிகையானது ஒவ்வொரு நாளும்  பொறுப்பற்ற முறையில் […]

உலகம் செய்தி

மெக்சிகோவில் (Mexico) தீ விபத்து – குழந்தைகள் உள்பட 23 பேர் பலி!

  • November 2, 2025
  • 0 Comments

மெக்சிகோவில் (Mexico)கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோனோரா (Sonora)  மாநிலத்தின் தலைநகரான ஹெர்மோசில்லோ (Hermosillo) நகர மையத்தில் நேற்று இந்த தீ விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் ஹெர்மோசில்லோவில் (Hermosillo) உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளில் “நச்சு வாயுக்களை உள்ளிழுத்ததால்”  இறப்புகள் ஏற்பட்டதாக  ஆளுனர் சலாஸ் சாவேஸ் (Salas Chávez) கூறியுள்ளார். தீ விபத்து […]

இலங்கை செய்தி

சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்!!

  • November 2, 2025
  • 0 Comments

புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாதது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார். 2026 சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா மற்றும் ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றபோது, ​​கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து […]

பொழுதுபோக்கு

‘கும்கி 2’ முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது

  • November 2, 2025
  • 0 Comments

பிரபு சாலமன் இயக்கியுள்ள ‘கும்கி 2’ படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொத்தி பொத்தி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் பாடலை அவரே பாடியுள்ளார். மோகன் ராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். மதி, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதேவேளை, இம்ான் இசையில் வெளிவந்த கும்கி 1 திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் ரீச்சாகி உள்ளது. அதேபோல் கும்கி 2 பாடலும் […]

விளையாட்டு

கோப்பை யாருக்கு? மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று

  • November 2, 2025
  • 0 Comments

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்க உள்ளது. இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த முறை, இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இத்தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இத்தொடரில் இந்தியா விளையாடிய 7 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே […]

உலகம்

இந்திய விமான நிலையத்தில் பயணிகள் பையில் சிக்கிய குரங்குகள்

  • November 2, 2025
  • 0 Comments

இந்திய விமான நிலையம் ஒன்றில் பயணியின் பையில் அரிய வகைக் குரங்குகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் அந்தப் பயணி மும்பை விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து தாய்லாந்து வழியாக இந்தியா சென்ற பயணியிடம் சுங்க அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டனர். இதன்போது பயணப் பையிலிருந்து குரங்குகளைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது இரண்டு குரங்குகளில் ஒன்று உயிரிழந்தமை தெரியவந்துள்ளது. விலங்குகளை நாட்டுக்கு நாடு கடத்தும் கும்பல் ஒன்றினால் குரங்குகள் தன்னிடம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேக நபரான பயணி தெரிவித்துள்ளார். […]

error: Content is protected !!