ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம் : தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகை!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சட்டப்பூர்வ உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி அமலுக்கு வரும் என்று அம்மாநிலத்தின் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ( Jacinta Allan) தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் சம வாய்ப்புச் சட்டத்தில் பொறிக்கப்படும் என்றும், வீட்டிலிருந்து வேலை செய்யும் உரிமைகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முதல் அதிகாரபூர்வ மாநிலமாக விக்டோரியா மாநிலம் மாறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை அனைத்து பணியிடங்களுக்கும் […]













