இலங்கை செய்தி

உரிய மீளாய்வின் பின்னரே வடக்கில் காணி விடுவிப்பு!

  • March 7, 2026
  • 0 Comments

” இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது.” இவ்வாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ யாழ்.பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படுவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரப்பட்டது. பாரிய […]

இலங்கை செய்தி

ஐ.என்.எஸ் தரங்கினி கொழும்பை வந்தடைந்தது

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியக் கடற்படையின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக்கப்பல், தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கோடும், இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் நல்லெண்ண அடிப்படையிலான இந்த விஜயம் அமைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் கடந்த 27 ஆம் திகதி  முதல் மார்ச் 02 வரையிலான தனது முதற்கட்ட விஜயத்தை மேற்கொண்டு, அங்கிருந்து […]

உலகம் செய்தி

இஸ்ரேலை நோக்கி ஹெஸ்பொல்லா சுமார் 70 ராக்கெட்டுகள் ஏவியது

  • March 6, 2026
  • 0 Comments

ஹெஸ்பொல்லா அமைப்பு நள்ளிரவு முதல் இஸ்ரேலை நோக்கி சுமார் 70 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி கூறுகையில், பல ராக்கெட்டுகள் தெற்கு லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார். “நேற்று நள்ளிரவுக்குப் பிறகு இஸ்ரேலை நோக்கி சுமார் 70 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், இந்த வார தொடக்கத்தில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து, லெபனான் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இலக்குகளை […]

உலகம் செய்தி

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – இந்தோனேசியா அதிரடி

  • March 6, 2026
  • 0 Comments

இளைஞர்களை நிகழ்நிலை துஷ்பிரயோகங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் சில பிரபலமான நிகழ்நிலை தளங்களை பயன்படுத்துவதற்கு இந்தோனேசியா தடை விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதிக ஆபத்து கொண்ட தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகள் மார்ச் 28 முதல் செயலிழக்கப்படும் என நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மியூத்யா ஹஃபித் தெரிவித்துள்ளார். இந்தத் தடை முதற்கட்டமாக YouTube, TikTok, Facebook, Instagram, Threads, X, Bigo Live […]

இலங்கை செய்தி

பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரும் சட்டத்தரணிகள்

  • March 6, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக பிள்ளையானினால் இந்த அடிப்படை உரிமை […]

இலங்கை செய்தி

இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியா Indian மற்றும் இலங்கை Sri Lankan வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று புது டெல்லியில் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ஈரான் சரணடைந்தால் மட்டுமே பேச்சு: ட்ரம்ப் திட்டம்!

  • March 6, 2026
  • 0 Comments

நிபந்தனையற்ற சரணடைவுக்கு இணங்கினால் மட்டுமே ஈரானுடன் பேச்சு நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவ்வாறு நடந்து தகுதியான தலைமையை ஏற்றுக்கொண்டால் ஈரானை பொருளாதார ரீதியாக மேம்படுத்த உதவி வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ஈரானின் தற்போதைய இக்கட்டான நிலையை மாற்றி, நட்பு நாடுகளுடன் இணைந்து அந்நாட்டை வலிமையான தேசமாக மாற்றுவதே தனது நோக்கம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சரணடைவதற்கு தயாரில்லை என ஈரான் ஏற்கனவே அறிவித்துள்ளது.

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் –  மோதல் ஏழாவது நாளை எட்டியது

  • March 6, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), ஈரானின் ஆட்சி உட்கட்டமைப்பு மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த தாக்குதல் தற்போது நடைபெற்று வரும் மோதலில் 15 ஆவது முக்கியமான தாக்குதலாகக் கூறப்படுகிறது. IDF தகவலின்படி, சுமார் 50 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு, தெஹ்ரானில் உள்ள ஒரு இராணுவ கட்டளை பதுங்கு மையம் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தெஹ்ரான் நகரில் வசிக்கும் மக்கள், “நேற்று இரவு இதுவரை மிகவும் மோசமான இரவு” என பிபிசி பாரசீக சேவைக்கு தெரிவித்துள்ளனர். […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை: பிரதமர் விளக்கம்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தும் எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. இதனை கடந்த மூன்று மாதங்களாக செயலில் நிரூபித்தோம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி Harini Amarasooriya அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவசரகாலச் சட்டத்தை நாம் அடக்குமுறைக்காககப் பயன்படுத்த வில்லை. கடந்த மூன்று மாதங்களாக அச்சட்டம் அமுலில் இருக்கின்றது. இக்காலப்பகுதிக்குள் மேற்படி சட்டம் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குரிய ஆதாரத்தை எதிரணியால் முன்வைக்க முடியுமா? எனவும் Prime Minister கேள்வி […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: நாடாளுமன்றம் ஒப்புதல்!

  • March 6, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை Parliament மீண்டும் அங்கீகரித்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை நீடித்து ஜனாதிபதி Anura Kumara Dissanayake வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அளிக்கும் பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விவாதத்தை அடுத்து இன்று மாலை சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவசரலகாலச்சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு ஆதரவாக 108 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக, 08 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதனால் 100 மேலதிக வாக்குகளால் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

error: Content is protected !!