ஆஸ்திரேலியா செய்தி

மத்திய கிழக்கிலுள்ள ஆஸ்திரேலியர்களை மீட்க விசேட ஏற்பாடு!

  • March 7, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பாக மீட்பதற்கு ஆஸ்திரேலிய Australian அரசாங்கம் புதிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இராஜதந்திர முயற்சிகளின் விளைவாக கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து Doha சவுதி அரேபியாவின் ரியாத் Riyadh நகருக்கு விசேட பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன, அங்கிருந்து வணிக விமானங்கள்மூலம் ஆஸ்திரேலியர்கள் தாயகம் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்தில் கொண்டு, குவைத், லெபனான் மற்றும் பஹ்ரைன் […]

உலகம் செய்தி

பாரிய வன்வழித் தாக்குதலை முறியடித்தது சவூதி!

  • March 7, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவின் பாதுகாப்புப் படைகள் அந்நாட்டின் முக்கிய எரிசக்தி மற்றும் இராணுவ நிலைகளை குறிவைத்து ஈரானால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துள்ளன. ஷைபா எண்ணெய் வயல் பகுதியை நோக்கி ஏவப்பட்ட ஆறு ஆளில்லா விமானங்கள் மற்றும் இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தை இலக்கு வைத்த ballistic m ஏவுகணை ஆகியவை இடைமறித்து அழிக்கப்பட்டன. உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த எண்ணெய் தளம் நாளொன்றுக்கு பத்து லட்சம் பேரல் கச்சா எண்ணெயை உற்பத்தி […]

இலங்கை

ஈரானிய கப்பல் பணியாளர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் – இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

  • March 7, 2026
  • 0 Comments

ஈரானிய கப்பல் பணியாளர்களை ஈரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக  ரொய்டர்ஸ்  செய்தி வெளியிட்டுள்ளது. ஐஆர்ஐஎஸ் தேனா ( IRIS Dena) போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை கேட்டுக் கொண்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாலுமிகளை பிரச்சார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியையும் […]

அரசியல் இலங்கை

மொட்டு கட்சியை கட்டியெழுப்ப மஹிந்த அணி வியூகம்!

  • March 7, 2026
  • 0 Comments

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை கிராமிய மட்டத்தில் மேலும் வலுப்படுத்தி, மாகாணசபைத் தேர்தலில் அமோக வெற்றியை பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச Mahinda Rajapaksa தலைமையில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்றது. பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய […]

இலங்கை செய்தி

உரிய மீளாய்வின் பின்னரே வடக்கில் காணி விடுவிப்பு!

  • March 7, 2026
  • 0 Comments

” இராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த காணிகள் உரிய மீளாய்வின் பின்னர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையிலேயே விடுவிக்கப்படுகின்றது.” இவ்வாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருன ஜயசேகர Aruna Jayasekara தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணைமீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். “ யாழ்.பாதுகாப்பு படை தலைமையகம் அகற்றப்படுவுள்ளது என சில வாரங்களுக்கு முன்னர் வதந்தி பரப்பட்டது. பாரிய […]

இலங்கை செய்தி

ஐ.என்.எஸ் தரங்கினி கொழும்பை வந்தடைந்தது

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியக் கடற்படையின் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான ‘ஐ.என்.எஸ் தரங்கினி’ பாய்மரக்கப்பல், தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கோடும், இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கும் இடையிலான பயிற்சிப் பரிமாற்றங்களை மேம்படுத்தும் நல்லெண்ண அடிப்படையிலான இந்த விஜயம் அமைந்துள்ளது. திருகோணமலை துறைமுகத்தில் கடந்த 27 ஆம் திகதி  முதல் மார்ச் 02 வரையிலான தனது முதற்கட்ட விஜயத்தை மேற்கொண்டு, அங்கிருந்து […]

உலகம் செய்தி

இஸ்ரேலை நோக்கி ஹெஸ்பொல்லா சுமார் 70 ராக்கெட்டுகள் ஏவியது

  • March 6, 2026
  • 0 Comments

ஹெஸ்பொல்லா அமைப்பு நள்ளிரவு முதல் இஸ்ரேலை நோக்கி சுமார் 70 ராக்கெட்டுகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடவ் ஷோஷானி கூறுகையில், பல ராக்கெட்டுகள் தெற்கு லெபனானில் இருந்து ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார். “நேற்று நள்ளிரவுக்குப் பிறகு இஸ்ரேலை நோக்கி சுமார் 70 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். மேலும், இந்த வார தொடக்கத்தில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்ததிலிருந்து, லெபனான் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இலக்குகளை […]

உலகம் செய்தி

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடக தடை – இந்தோனேசியா அதிரடி

  • March 6, 2026
  • 0 Comments

இளைஞர்களை நிகழ்நிலை துஷ்பிரயோகங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் சில பிரபலமான நிகழ்நிலை தளங்களை பயன்படுத்துவதற்கு இந்தோனேசியா தடை விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதிக ஆபத்து கொண்ட தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகள் மார்ச் 28 முதல் செயலிழக்கப்படும் என நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சர் மியூத்யா ஹஃபித் தெரிவித்துள்ளார். இந்தத் தடை முதற்கட்டமாக YouTube, TikTok, Facebook, Instagram, Threads, X, Bigo Live […]

இலங்கை செய்தி

பிள்ளையானைச் சந்திக்க அனுமதி கோரும் சட்டத்தரணிகள்

  • March 6, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, அவரது சட்டத்தரணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (06) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமைக்கு எதிராக பிள்ளையானினால் இந்த அடிப்படை உரிமை […]

இலங்கை செய்தி

இந்திய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • March 6, 2026
  • 0 Comments

இந்தியா Indian மற்றும் இலங்கை Sri Lankan வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று புது டெல்லியில் இன்று (06) மாலை இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை புதுடெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்நிலையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!