ஐரோப்பா செய்தி

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்தில் பலத்த மழை வீழ்ச்சி – மஞ்சள் எச்சரிக்கை

லண்டன், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு இங்கிலாந்து, வேல்ஸின் சில பகுதிகளில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நண்பகல் 12 மணி முதல் அமலுக்கு வருகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வெள்ள பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்கும் ஆதரவு குழுக்கள் களத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வாரத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான பகுதிகளில் இடைவிடாத மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸில் மீண்டும் பலத்தமழை எதிர்பார்க்கப்படுகிறது.
வாரத்தின் நடுப்பகுதியில் குளிரான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து மலைகளில் சிறிது காலத்திற்கு பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வெயிலுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகுிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!