விளையாட்டு

மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஹசரங்க!

ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா 213 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 211 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

அத்துடன், இலங்கை அணியின் தசுன் ஷானக்க 15ஆம் இடத்தில் உள்ளார்.

ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சில வாரங்களுக்கு முன் முதலிடத்திலிருந்தார்.

சகலதுறை வீரர்களுக்கான புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று ஹர்திக் பாண்டியா மற்றும் இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஆகியோர் சமநிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 63 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ